புதிய கட்டமைப்புடன் மின்னும் ஜான்சி நகரம்! வேலை வாய்ப்பில் அசத்தி காட்டிய உ.பி அரசு.. யோகி பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் ஜான்சி நகரத்தை தரம் உயர்த்த அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, "நொய்டாவை மேம்படுத்த தீவிரமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது நல்ல பலனை கொடுத்திருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் நொய்டா புதிய பாதையில் சிறப்பாக பயணித்து வருகிறது. நகரங்களின் கட்டமைப்புகளை சிறப்பாக மாற்ற அமல்படுத்தப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளதையடுத்து மாநிலத்தின் மற்ற நகரங்களையும் மேம்படுத்த இதே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அந்த வகையில், ஜான்சி நகரம் மாற்றமடைந்து வருகிறது.

பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் தொழிற்சாலையை ஜான்சியில் தொடங்க கடந்த 2021ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியிருந்தார். இதற்கான இடங்கள் கையகப்படுத்தப்பட்டு, தொழிற்சாலை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இது ஜான்சி மாவட்டத்தின் வளர்ச்சியை வேகப்படுத்தும். இளைஞர்கள் வேலைக்காக வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. ஜான்சி நகரத்தை ஒட்டியுள்ள 33 கிராமங்கள் நகரத்துடன் நேரடியாக இணைக்கப்படும்.
நாங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை ட்ரில்லியன் டாலராக உயர்த்த திட்டமிட்டிருக்கிறோம். அதற்கான எல்லா சாத்தியமான வாய்ப்புகளையும் பயன்படுத்தி வருகிறோம். எங்கள் இளைஞர்களின் உழைப்பு மற்ற மாநிலங்களுக்கு பலனளிப்பதை விட, சொந்த மாநிலத்திற்கு பலனளிப்பதைதான் நாங்கள் அதிகம் விரும்புகிறோம். அந்த வகையில், சிறு நகரங்களை மேம்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் நல்ல பலனை கொடுத்திருக்கிறது. நேற்று நொய்டா, இன்று ஜான்சி நாளை வேறு ஒரு நகரம் என தொடர்ச்சியாக வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications