நம்பர் 1 ஊழல்வாதி என்ற பட்டத்துடன் உங்க அப்பா இறந்தார்.. ராகுலை கடுமையாக சீண்டிய மோடி!
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியின் வாழ்க்கையாக முடிந்தது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
லக்னோ: மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியின் வாழ்க்கையாக முடிந்தது என்று பிரதமர் மோடி பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
பிரதமர் மோடி லோக்சபா தேர்தலுக்காக தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். முக்கியமாக அவர் பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை அவர் உத்தர பிரதேசத்தில் பிரச்சாரம் செய்தார். பாஜக கூட்டணியை சேர்ந்த பல தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

மோடி பேச்சு
பிரச்சாரத்தில் பேசிய மோடி, காங்கிரஸ் கட்சி என் மீது களங்கம் விளைவிக்க பார்க்கிறது. பாஜக ஆட்சி மீது எந்த விதமான குறைகளையும் சொல்ல முடியாது என்பதால் பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். ரபேல் வழக்கிலும் அப்படித்தான் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை தெரிவிக்கிறார்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி என் மீது ரபேலில் களங்கம் விளைவிக்க பார்க்கிறார். என்னை களங்க படுத்தி, என்னை சிறியவன் போல காட்டி ஆட்சியை பிடிக்க பார்க்கிறார். ஆனால் அவர்கள் ஆட்சி அமைத்தால் வலுவற்ற ஒரு ஆட்சிதான் உருவாகும்.

முடியாது
என் மீது ராகுல் காந்தி சொல்லும் புகார்களை நிரூபிக்க முடியாது. இந்த புகார்கள், அவருக்குத்தான் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். நான் அவரை போல பணக்கார குடும்பத்தில் பிறக்கவில்லை. நான் மக்களோடு, மக்களாக ஏழையாக பிறந்தேன்.

மிக மோசம்
உங்கள் அப்பா ராஜீவ் காந்தியை பெரிய நல்லவர் போல காங்கிரஸ் சித்தரித்தது. மிஸ்டர் கிளீன் என்று கூட சொன்னார்கள். ஆனால் அவர்தான் நம்பர் ஒன் ஊழல்வாதி. உங்கள் அப்பாவின் வாழ்க்கை ஒரு ஊழல்வாதியாகத்தான் முடிந்தது, என்று பிரதமர் மோடி பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications