மதுரையில் சரவணன் எம்எல்ஏ முன்னிலையில் அதிமுக, பாஜகவில் இருந்து திமுகவில் இணைந்த 500 பேர்
மதுரை: மதுரையில் டாக்டர். பா.சரவணன் எம்எல்ஏ ஏற்பாட்டில் அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட மாற்றுக்கட்சியினர் 500 பேர் தி.மு.க'வில் இணையும் விழா நடந்தது

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினால் துவங்கப்பட்ட "எல்லோரும் நம்முடன்" இணையவழி உறுப்பினர்கள் சேர்க்கும் விழா தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. மதுரையில் திமுக மாநகர் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் டாக்டர்.பா.சரவணன் MLA வின் ஏற்பாட்டில் செல்லூர் பகுதியில் அ.தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் தி.மு.க'வில் இணையும் விழா நடைபெற்றது. மேலும், கழகத்தின் மூத்த உறுப்பினர்கள் 50 நபர்களுக்கு டாக்டர்.சரவணன் அவர்கள் பொற்கிழி வழங்கி கவுரவித்தார்.

வட்ட செயலாளர்கள் புதூர் வேலு, ஆபித் ஓம் ராஜபாண்டி, நல்லகாமன், மணிமொழியன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் புண்ணியமூர்த்தி, இலக்கிய அணி மாவட்ட அமைப்பாளர் .பி.ஆர்.சி.ரமேஷ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் தமிழ்ச்சந்திரன் மற்றும் சந்தான பாண்டி, மாணவரணி சந்தான பாலாஜி, விவசாய அணி .துரை.ராஜேஷ், இஸ்மாயில், பாண்டிச்செல்வம், ஸ்ரீனிவாசன், அமுல்ராஜ், .அதிபதி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.













Click it and Unblock the Notifications