நடிகர் சூரி வீட்டு கல்யாணத்தில் திடீரென வந்த மர்ம ஆசாமி.. செஞ்ச வேலையால் கலங்கிப்போன குடும்பம்
மதுரை: மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு நடந்த விவகாரத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 சவரன் நகைகளை போலீசார் மீட்டனர்.
Recommended Video
இதனிடையே அந்த இளைஞரை பிடித்து நடத்திய விசாரணையில் மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 18 இதற்கு மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த நகைச்சுவை நடிகர் சூரியின் இல்லத் திருமண விழா கடந்த 9ஆம் தேதி மதுரை சிந்தாமணி பகுதியில் இருக்கக்கூடிய பிரபல தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,

திரை பிரபலங்கள்
கொரோனா காலம் என்பதால் பல்வேறு கட்டுப்பாடுகள் நடைபெற்ற நடிகர் சூரியின் இல்லத் திருமண விழாவில் தமிழகம் முழுவதும் உள்ள முக்கியமான சில பிரமுகர்களும் திரை பிரபலங்களும் பங்கேற்றனர்.

போலீசில் புகார்
இந்த நிலையில் மணமகளின் உறவினர் மணமகளுக்கு பரிசாக வழங்க வைத்திருந்த சுமார் 10 சவரன் நகையை மணமகள் அறையில் இருந்து மர்மநபர்கள் திருடிச் சென்றதாக நடிகர் சூரியின் மேலாளர் சூரிய பிரகாஷ் கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

சிக்கிய வாலிபர்
அதனைத் தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் திருமண மண்டபத்தில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சியை பதிவு செய்யபட்ட வீடியோ காட்சிகளை ஆய்வு செய்த போது வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்குரிய வகையில் அங்கும் இங்கும் சுற்றி வருவது பதிவாகி இருந்தது.

கண்டுபிடிப்பு
அதனை அடிப்படையாக கொண்டு காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் அவர் பரமக்குடியை சேர்ந்த விக்னேஷ் என்பதும் அவர் நகை திருடியதும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து பரமக்குடியில் பதுங்கி இருந்த அவரை கைது செய்த கீரைத்துறை காவல்துறையினர் அவரிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டு மதுரை அழைத்து வந்தனர்.

பலே திருடன்
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் மீது மதுரை, சிவகங்கை,தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் 18 க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications