ஒரு விளம்பரம்.. இப்படியும் பப்ளிசிட்டி திருடன்.. சூரி வீட்டு கல்யாணத்தில் நகை திருடிய விக்னேஷ் யார்?
மதுரை: கடந்த வாரம் மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருட்டு நடந்த விவகாரத்தில் சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் விக்னேஷை கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், நடத்திய விசாரணையில், கைதான இளைஞர் விளம்பர பிரியர் என்பதும், வேண்டுமென்றே நகையை திருடி மாட்டிக்கொண்டார் என்பதும் தெரியவந்துள்ளது.
விக்னேஷின் வேலையே சுய விளம்பரத்திற்காக முக்கிய பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது , அங்கு நகையை திருடுவது பின்னர் போலீசில் மாட்டி சிறைக்கு செல்வது அதன்பின்னர் அவரை பற்றி ஊடகங்களில் வரும் செய்தியை சமுக வலைதளங்களில் பரப்பி விளம்பரம் தேடுவது என வித்தியாசமானவராக இருக்கிறார் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

விக்னேஷ்
சூரி வீட்டில் நகை திருடி மாட்டிய விக்னேஷ் குறித்து போலீசார் கூறும் போது, "ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நகை கடை வைத்திருக்கும் மணிவாசகம் என்பவரது மகன் தான் விக்னேஷ். பட்டப்படிப்பு படித்துள்ள விக்னேஷ் விளம்பர பிரியர். சுய விளம்பரத்திற்காக மதுரை, சென்னை உள்ளிட்ட ஊர்களுக்கு சென்று அங்கு உள்ள சினிமா பிரபலங்கள், முக்கிய நபர்களிடம் நெருங்கி பழகுவாராம். அத்துடன் அவர்களுடன் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டார்.

மதுரை அதிகாரி வீடு
குறிப்பாக விக்னேஷ் பிரபலங்களின் இல்லங்களில் நடைபெறும் விஷேசங்களில் அழைக்காமலேயே பங்கேற்று வந்திருக்கிறார். அப்படி பங்கேற்கும் விழாக்களில் நகை, பணம் என எதாவது ஒன்றை திருடி தாமாகவே மாட்டி கொள்வார். அப்படித்தான் அண்மையில் மதுரையில் நடந்த போலீஸ் உயர் அதிகாரியின் மகள் பிறந்தநாள் விழாவில் விக்னேஷ் கலந்து கொண்டிருக்கிறார்.

புகைப்படம் பதிவு
அவரது மகள் கழுத்தில் இருந்த வைர நெக்லஸை திருடிச் சென்றுள்ளார். பின்னர் காவல்துறையினரால் விக்னேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே வெளியே வந்த பின்னர் செய்தித்தாள் மற்றும் ஊடகங்களில் தன்னை பற்றி திருட்டு சம்பந்தபட்ட செய்திகளை சேகரித்து விளம்பரத்திற்காக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விளம்பரப்படுத்திக் கொள்வார். அப்படித்தான் நடிகர் சூரி மற்றும் அவரது குடும்பத்தினருடன் நெருக்கமாகத் தொடர்பில் இருப்பது போன்ற புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருக்கிறார்.

சுயவிளம்பரம்
இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் மகள் திருமண விழாவில் 10 சவரன் நகையைதிருடிய விக்னேஷை போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் நகையைத் திருடியதை விக்னேஷ் ஒப்புக்கொண்டுள்ளார். விக்னேஷ் பொழுதுபோக்கிற்காகவும், தனது சுய விளம்பரத்திற்காகவும் இது போன்ற திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது போலீசாரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

காவல்துறை தகவல்
விக்னேஷ் அவ்வப்போது சென்னை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் தங்கிக் கொண்டு அங்கிருந்து தனது அப்பாவிற்கு ஃபோன் செய்து செய்தித்தாளில் தன்னை காணவில்லை என புகைப்படத்துடன் விளம்பரம் கொடுக்க சொல்வதை வாடிக்கையாக கொண்டவராம். கிட்டத்தட்ட புத்திசுவாதீனம் இல்லாத அளவிற்கு நடந்து கொண்டு வந்திருக்கிறார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications