Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துடியான தெய்வம்.. எச்சில் இலை காயும் வரை பெண்கள் வரக்கூடாது! மதுரையில் விநோத கறி விருந்து திருவிழா

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத கறி விருந்து திருவிழா அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. நாயக்க மன்னர் காலத்திலிருந்து இந்த திருவிழா நடந்து வருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பெரும் தெய்வங்களை விட, நாட்டுப்புற தெய்வங்களுக்கு திருவிழாக்கள் சிறப்பாக நடத்தப்படுவது வழக்கம். இன்னும் குறிப்பாக தென் மாவட்டங்களில் இந்த திருவிழாக்கள் மிகச்சிறப்பாக நடைபெறும். அந்த வகையில் இன்று மதுரை மாவட்டத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் விநோத திருவிழா நடந்து வருகிறது.

A strange festival where only men participate is specially celebrated in Madurai

மதுரையின் திருமங்கலம் பகுதியில் அனுப்பப்பட்டி கிராமம் இருக்கிறது. இக்கிராமத்தின் காவல் தெய்வமாக கரும்பாறை முத்தையா இருக்கிறார். இவருக்கு உருவம் கிடையாது. ஆயினும் கோயில் இருக்கிறது. இந்த தெய்வம் மற்ற காவல் தெய்வங்களை காட்டிலும் மிகவும் துடியானது என்று மக்கள் கூறுகின்றனர். ஆண்டுக்கு ஒருமுறை மார்கழி மாதத்தில் இக்கோயில் திருவிழா நடைபெறும். திருவிழாவுக்காக ஆடுகள் கோயிலுக்கு நேர்ந்து விடப்படும். அதிலும் கருப்பு நிற ஆடுகள் மட்டுமே நேர்ந்துவிடப்படும்.

இந்த ஆடுகள் வயல்வெளியில் மேய்ந்தால் கூட அதை மக்கள் துரத்த மாட்டார்கள். கரும்பாறை முத்தையா சாமி, ஆடு மூலமாக வருவதாக அவர்கள் நம்புகிறார்கள். இந்த ஆடுகள் திருவிழாவின் போது வெட்டப்பட்டு சாமிக்கு படைக்கப்படும். 100 ஆடுகள், 1000 கிலோ அரிசி கொண்டு இந்த படையல் வைக்கப்படும். இதில் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்கள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் தொடக்கத்தில் இந்த விழா நடத்தப்படுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டும் திருவிழா கோலாகலமாக தொடங்கப்பட்டிருக்கிறது. ஏராளமான ஆடுகள் வெட்டப்பட்டு அது பெரிய அண்டாக்களில் போட்டு குழம்பு வைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் வடித்து மலைபோல குவித்து வைக்கப்பட்டிருக்கும் சோற்றில் இந்த குழம்பு கொட்டப்பட்டு படையல் நடத்தப்பட்டிருக்கிறது. படையலுக்கு பின்னர் 10 ஆயிரத்திற்கும் அதிகமான ஆண்களுக்கு உணவு பரிமாறப்பட்டிருக்கிறது.

இந்த விழாவில் பெண்களுக்கு அனுமதி கிடையாது. பெண் குழந்தைகள் கூட பங்கேற்க கூடாது என்பது வழக்கம். அதேபோல ஆண்கள் சாப்பிட்டுவிட்டு இலையை எடுக்காமல் சென்றுவிடுவார்கள். அது அங்கு மாயமாக மறைந்துவிடும் என்பது இவர்களது நம்பிக்கை. இப்படி இலை மறைந்து போகும் வரை அந்த கோயிலுக்கு எந்த பெண்ணும் வழிபாட்டுக்கு செல்லமாட்டார்கள்.

இந்த திருவிழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் வரை நடைபெறுகிறது. இதில் திருமங்கலத்தை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து ஆண்கள் பங்கேற்றிருக்கின்றனர். நாயக்க மன்னர் ஆட்சி காலத்திலிருந்து இந்த திருவிழா நடத்தப்பட்டு வருவதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+