கையில் அறுவைச் சிகிச்சை முடிந்து 15 நாள் கூட ஆகல! அதிமுக மாநாட்டிற்கு முதல் ஆளாக வந்த தொண்டர்!
மதுரை: கையில் அறுவைச் சிகிச்சை முடிந்து 15 நாட்கள் கூட ஆகாத நிலையில் மனைவியுடன் மதுரை மாநாட்டில் கலந்துகொண்டு கவனம் ஈர்த்திருக்கிறார் அதிமுக தொண்டர் இளங்கோவன்.
மதுரையில் உற்சாகம் கரைபுரள அதிமுக மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள கோவிலடி கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் -வசந்தா தம்பதியினர் டூவிலரிலேயே 250 கிலோ மீட்டர் தூரம் பயணித்து வந்திருந்தனர்.

இளங்கோவனுக்கும் அவரது மனைவி வசந்தாவுக்கும் எம்.ஜி.ஆர். காலம் தொட்டே கட்சி என்றால் உயிராம். இந்நிலையில் வசந்தாவுக்கு கையில் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள வேண்டிய சூழல் வந்ததால் சில நாட்களுக்கு முன்னர் ஆப்ரேஷன் நடத்தப்பட்டிருக்கிறது. இதையடுத்து அவரை வீட்டில் ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் அதிமுக மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கணவர் இளங்கோவனோடு மதுரை வந்து சேர்ந்துள்ளார் வசந்தா.
இன்று நேற்ற பல ஆண்டுகளாக கட்சி நிகழ்ச்சிகள் எதுவாயினும் அதனை தவிர்க்காமல் அட்டெண்ட் செய்து வருவதாக தெரிவிக்கிறார் அதிமுக தொண்டர் இளங்கோவன்.

இந்நிலையில் இளங்கோவனுடனும் அவரது மனைவி வசந்தாவுடனும் அதிமுகவினர் செல்ஃபி எடுத்து தங்கள் கட்சியின் தொண்டர் குறித்து பெருமிதமாக பதிவிட்டு வருகின்றனர். இதேபோல் அதிமுக மாநாட்டுத் திடலில் இன்னும் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன.
வெளியூர்களில் இருந்து வந்திருப்பவர்கள் விரைவில் வீடு திரும்பும் வகையில் இரவு 8 மணிக்குள் எடப்பாடி பழனிசாமி தனது உரையை முடித்துக்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே மாலை 4 மணிக்கெல்லாம் எடப்பாடி பழனிசாமி மாநாடு மேடையேறிவிடுவார் எனத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications