விசாரணைக்கு வருகிறேன்! நாட்டுக்கோழி தருவீங்களா! போலீஸாரிடம் அதிமுக Ex எம்.எல்.ஏ.ராஜவர்மன் குசும்பு!
மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆஜரான சாத்தூர் தொகுதி அதிமுக Ex எம்.எல்.ஏ. ராஜவர்மன், போலீஸாரிடம் மதிய உணவுக்கு நாட்டுக்கோழி கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தன்னை தேடி யாரும் அலைய வேண்டாம் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டு ஓடி ஒளியமாட்டேன் எனவும் போலீஸாரிடம் காலரை தூக்கிவிட்டப்படி கூறியிருக்கிறார் ராஜவர்மன்.
ராஜேந்திரபாலாஜி தலைமறைவு தொடர்பாக மிக சீரியஸாக விசாரணை நடத்தி வரும் குற்றப்பிரிவு போலீஸாருக்கு ராஜவர்மனின் பேச்சையும், நடவடிக்கையையும் பார்த்த போது அழுவதா சிரிப்பதா என நினைக்கத் தோன்றியதாம்.

Ex அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த ஒரு 15 நாட்களாக தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை பிடிக்க 6 தனிப்படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவர்களாக அறியப்படுபவர்களிடம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராஜேந்திரபாலாஜியின் அரசியல் சீடரும் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜவர்மனிடமும் விசாரணை நடைபெற்றிருக்கிறது.

மதிய உணவு
நேற்று நண்பகல் 12 மணியளவில் விசாரணைக்கு சென்ற ராஜவர்மன், தனக்கு மதிய உணவுக்கு நாட்டுக் கோழி வாங்கிக் கொடுப்பீர்களா என போலீஸாரிடம் குசும்பு செய்தாராம். அதனை பொருட்படுத்தாத குற்றப்பிரிவு போலீஸார், இளநீர் மட்டும் வாங்கிக்கொடுத்து தங்களுக்கு தேவையான தகவல்களை திரட்டிக்கொண்டு ராஜவர்மனை அனுப்பி வைத்திருக்கிறது.

அலைய வேண்டாம்
முன்னதாக விசாரணையின் போது, தன்னை தேடி நீங்கள் யாரும் அலைய வேண்டாம் என குற்றப்பிரிவு போலீஸாரிடம் கூறிய ராஜவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்துக்கொண்டு எங்கும் ஓடி ஒளியமாட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார். இதனிடையே ராஜவர்மனிடம் அவர் பாணியிலேயே பேச்சுக்கொடுத்து சில முக்கிய விவரங்களை குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் விசாரணை
இந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முன்னாள் எம்.எல்.ஏ.ராஜவர்மன், ராஜேந்திரபாலாஜி வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவார், அவர் உடல்நிலை சரியில்லாதவர். முன் ஜாமின் வாங்குவதற்காக சென்றிருக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறார். மீண்டும் ராஜவர்மனை அழைத்து இந்தமுறை சற்று கடுமையான முறையில் விசாரணை நடத்தவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
-
31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக் -
செய்யாறு தொகுதியின் தவெக வேட்பாளரானார் தூசி.கே.மோகன்! எடப்பாடி பழனிசாமி அதிரடி ஆக்ஷன்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications