Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விசாரணைக்கு வருகிறேன்! நாட்டுக்கோழி தருவீங்களா! போலீஸாரிடம் அதிமுக Ex எம்.எல்.ஏ.ராஜவர்மன் குசும்பு!

Subscribe to Oneindia Tamil

மதுரை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் ஆஜரான சாத்தூர் தொகுதி அதிமுக Ex எம்.எல்.ஏ. ராஜவர்மன், போலீஸாரிடம் மதிய உணவுக்கு நாட்டுக்கோழி கேட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், தன்னை தேடி யாரும் அலைய வேண்டாம் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டு ஓடி ஒளியமாட்டேன் எனவும் போலீஸாரிடம் காலரை தூக்கிவிட்டப்படி கூறியிருக்கிறார் ராஜவர்மன்.

ராஜேந்திரபாலாஜி தலைமறைவு தொடர்பாக மிக சீரியஸாக விசாரணை நடத்தி வரும் குற்றப்பிரிவு போலீஸாருக்கு ராஜவர்மனின் பேச்சையும், நடவடிக்கையையும் பார்த்த போது அழுவதா சிரிப்பதா என நினைக்கத் தோன்றியதாம்.

Ex அமைச்சர்

Ex அமைச்சர்

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கடந்த ஒரு 15 நாட்களாக தலைமறைவாக இருக்கும் நிலையில், அவரை பிடிக்க 6 தனிப்படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் ராஜேந்திரபாலாஜிக்கு நெருக்கமானவர்களாக அறியப்படுபவர்களிடம் விருதுநகர் குற்றப்பிரிவு போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ராஜேந்திரபாலாஜியின் அரசியல் சீடரும் சாத்தூர் தொகுதி அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராஜவர்மனிடமும் விசாரணை நடைபெற்றிருக்கிறது.

மதிய உணவு

மதிய உணவு

நேற்று நண்பகல் 12 மணியளவில் விசாரணைக்கு சென்ற ராஜவர்மன், தனக்கு மதிய உணவுக்கு நாட்டுக் கோழி வாங்கிக் கொடுப்பீர்களா என போலீஸாரிடம் குசும்பு செய்தாராம். அதனை பொருட்படுத்தாத குற்றப்பிரிவு போலீஸார், இளநீர் மட்டும் வாங்கிக்கொடுத்து தங்களுக்கு தேவையான தகவல்களை திரட்டிக்கொண்டு ராஜவர்மனை அனுப்பி வைத்திருக்கிறது.

அலைய வேண்டாம்

அலைய வேண்டாம்

முன்னதாக விசாரணையின் போது, தன்னை தேடி நீங்கள் யாரும் அலைய வேண்டாம் என குற்றப்பிரிவு போலீஸாரிடம் கூறிய ராஜவர்மன், முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்துக்கொண்டு எங்கும் ஓடி ஒளியமாட்டேன் எனத் தெரிவித்திருக்கிறார். இதனிடையே ராஜவர்மனிடம் அவர் பாணியிலேயே பேச்சுக்கொடுத்து சில முக்கிய விவரங்களை குற்றப்பிரிவு போலீஸார் சேகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மீண்டும் விசாரணை

மீண்டும் விசாரணை

இந்த விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்த முன்னாள் எம்.எல்.ஏ.ராஜவர்மன், ராஜேந்திரபாலாஜி வர வேண்டிய நேரத்தில் சரியாக வருவார், அவர் உடல்நிலை சரியில்லாதவர். முன் ஜாமின் வாங்குவதற்காக சென்றிருக்கிறார் எனத் தெரிவித்திருக்கிறார். மீண்டும் ராஜவர்மனை அழைத்து இந்தமுறை சற்று கடுமையான முறையில் விசாரணை நடத்தவும் அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+