"புதிய விஞ்ஞானி" போகாத ஊருக்கு வழி சொல்லும் அமைச்சர் பன்னீர்செல்வம்.. ஆர்பி உதயகுமார் பதிலடி!
மதுரை: எடப்பாடி பழனிசாமியை போலி விவசாயி என்று விமர்சித்த வேளாண்துறை அமைச்சரின் எம்ஆர்கே பன்னீர் செல்வத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
குறுவை பயிற்சேதம் குறித்த எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மறுப்பு தெரிவித்ததோடு, இபிஎஸ்-ஐ போலி விவசாயி என்று விமர்சித்தார்.

ஆர்பி உதயகுமார் பதிலடி
இந்த நிலையில் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பதிலடி கொடுத்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விவசாயம் செழிக்க தனது ஆட்சி காலத்தில் இபிஎஸ் பல்வேறு திட்டங்களை செய்தார்.
தற்போது டெல்டா மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவி வழங்கவேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தால், அதற்கு வேளாண் துறை அமைச்சர் புள்ளி விவரம் வேறுபாடு உள்ளது என்று கூறுகிறார்.

திமுக தேர்தல் அறிக்கை
திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டத்திற்கு ரூ.10,000 கோடி நிதி ஒதுக்கப்படும் என்று கூறினார்கள், ரூ.2,000 கோடியில் 200 தட்டுப்பணைகள் கட்டப்படும் என்று கூறினார்கள். சென்னை நகர் ஆறுகளை பாதுகாப்பிற்கு ரூ.5,000 கோடி ஒதுக்கப்படும் என்று கூறினார்கள். பேச்சுப்பாறை அணை சீரமைக்கப்படும். நொய்யல் ஆறு சீர்படுத்தி, பவானி ஆறு,அமராவதிஆறுகளில் உபரிநீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க திட்டம் போட்டார்கள். கடலூர் வெள்ள பாதுகாப்புக்கு அரிவாள் மூக்கு வடிகால் திட்டம் அமைக்கப்படும் என்று சொன்னார்கள். இதை எல்லாம் எதுவும் செய்தார்களா?

பட்டுக்கோட்டைக்கு வழி கொட்டப்பாக்கு
விவசாயிகள் நலம் சார்ந்து எடப்பாடியார் கோரிக்கை வைத்தால் அந்த புள்ளி விவரத்தை அதிகாரிகளை வைத்து ஆய்வு செய்ய வேண்டும், நீங்களும் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதே காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேற்றிலே இறங்கி எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்து நிவாரணங்கள் வழங்கினார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வருவாய் துறை, வேளாண் துறை ஆகிய துறைகளும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். விவசாயிகள் வேதனை வடிக்கும் கண்ணீருக்கு என்ன வழி என்று கேட்டால், பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டப்பாக்கு என்று பதில் சொல்வது போல அமைச்சர் பதில் உள்ளது.

புதிய விஞ்ஞானி
விவசாயிகளுக்கு வேதனைக்கு விடை கேட்டால் இன்று தருவோம், நாளை தருவோம் என்று கூற வேண்டியது தானே? அதற்கு பதில் அறிக்கையில் எழுத்து பிழை உள்ளது என்று புதிய விஞ்ஞானி போல் கண்டுபிடித்து வேளாண்துறை அமைச்சர் பதில் கூறுகிறார் என்று விமர்சித்துள்ளார்.
-
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications