அதிமுக என்ற மேஜிக் கூட்டணி எடுபடாது... நாங்க தான் ஜெயிப்போம்.. மார் தட்டும் தங்க தமிழ்செல்வன்
Recommended Video
மதுரை:அதிமுக,பாஜக அடங்கிய மேஜிக் கூட்டணி தமிழகத்தில் எடுபடாது, மக்கள் ஆதரவோடு அமமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாநகர் வடக்கு மாவட்ட கழக மீனவரணி மற்றும் பொறியாளர் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாளினை முன்னிட்டு பாண்டிகோவிலில் 3000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை அமமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் தொடங்கி வைத்தார்.
மாவட்ட கழக்செயலாளர் மா.ஜெயபால் மற்றும் மாவட்ட மீனவரணி செயலாளர் மதன், பொறியாளர் அணி செயலாளர் ராஜேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அப்போது செய்தியாளர்களுக்கு தங்க தமிழ்செல்வன் பேட்டியளித்தார்.
யாருடன் கூட்டணி?
அவர் கூறியதாவது:அமமுக மாநில கட்சிகளோடு கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. எஸ்டிபிஐ கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம். ஒரு வாரத்திற்குள் மாநில கட்சிகள் உடனான கூட்டணி குறித்து நல்ல முடிவு வரும்.
மேஜிக் கூட்டணி
அமமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். அம்மாவிற்கு இணையானவர்கள் யாரும் இல்லை. மெகா கூட்டணி மேஜிக் கூட்டணி எல்லாம் தமிழகத்தில் எடுபடாது. அதிமுகவை பாமக கேவலமாக விமர்சித்த நிலையில் கூட்டணி வைத்திருப்பது சந்தர்ப்பவாத கூட்டணி. லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றால் தமிழகத்தின் உரிமைகளை பெற்று தருவோம்.
நிச்சய வெற்றி
மக்கள் விரும்பும் கூட்டணியை அமமுக அமைத்து நிச்சயம் வெற்றிபெறும். விஜயகாந்த் உடல்நலத்தை தலைவர்கள் விசாரிப்பதை அவரது மகன் தவறாக பேசுவது தவறு. அதிமுக, பாஜக சந்தர்ப்பவாத கூட்டணியின் அவலங்கள் குறித்தும், தமிழகத்தின் உரிமைகளை மத்திய அரசுகள் பறித்து தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாடை மேற்கொள்ளும் கட்சிகளின் நிலைப்பாட்டை எடுத்துகூறி பிரச்சாரம் மேற்கொள்வோம்.
படுதோல்வி
தமிழகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் வகையிலான தேர்தல் வாக்குறதிகளை எடுத்துரைத்து பிரச்சாரம் மேற்கோள்வோம். அதிமுக திமுகவை மக்கள் படுதோல்வியை அடைய வைப்பார்கள்.
எளிதில் வெற்றி
பணத்தில் வேண்டுமானால் ஓபிஎஸ் பலமாக இருக்கலாம்.. ஆனால் மக்களிடம் பலமாக இல்லை. தொண்டர்கள் போட்டியிட்டால் கூட எங்களது கூட்டணிக்கு வெற்றி எளிதில் கிடைக்கும் என்று அவர் கூறினார்.