ராத்திரி நேரமாச்சுன்னா.. மதுரை மாடக்குளத்தில்.. அதிர வைக்கும் காட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    மதுரையில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களை நூதன முறையில் திருட்டு-வீடியோ

    மதுரை: மதுரையில் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களை நூதன முறையில் திருடி செல்லும் கொள்ளையர்கள் குறித்த பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

    மதுரை மாடக்குளம் பகுதியில் உள்ள கந்தசாமி சேர்வை நகரைச் சேர்ந்த பாலகுமாரன் என்பவர் நேற்று இரவு பணி முடித்து விட்டு அவருடைய விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை வீட்டு வாசலில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார்

    bike thieves loot motorcycles in midnight

    இந்த நிலையில் காலையில் எழுந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதனை தொடர்ந்து பாலமுருகன் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.

    அப்போது நள்ளிரவு ஒரு மணியளவில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வரும் மூன்று நபர்கள் பாலகுமாரின் இருசக்கர வாகனத்தின் பூட்டை உடைத்து மற்றொரு வாகனத்தில் துணையுடன் தள்ளிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் எஸ்.எஸ் காலனி மற்றும் கரிமேடு காவல்நிலையகளில் ஐந்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் திருடு போனது குறிப்பிடத்தக்கது. நள்ளிரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நள்ளிரவு திருடர்களைப் பிடிக்க தற்போது போலீஸார் ஸ்கெட்ச் போட்டு வலை விரித்து தேடி வருகின்றனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+