பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா - மதுரை மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை: முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து அவர் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Recommended Video

தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. தினசரியும் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகிறார்கள். தினசரியும் நூற்றுகணக்கானோர் உயிரிழந்து வருகின்றனர்.
நாடு முழுவதும் அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்ட பலரும் உயிரிழந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மத்திய முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. கன்னியாகுமரி மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்தை எதிர்த்து பாஜக சார்பில் பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். கடந்த 2ம் தேதி முடிவுகள் வெளியான நிலையில், 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். தேர்தலுக்காக பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்த அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டதை அடுத்து அவர் நேற்று இரவு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தொடர்ந்து காய்ச்சல் அதிகரிக்கவே இன்று காலை மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என முடிவு தெரியவந்துள்ளது. இதனையடுத்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பொன். ராதாகிருஷ்ணன் விரைவில் குணமடைய தலைவர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications