சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு! 9 போலீஸாருக்கும் கருணை கூடாது! மத்திய அரசு அனுப்பிய அறிக்கை
மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் சிறையிலிருக்கும் 9 போலீஸ் அதிகாரிகளுக்கும் அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டுமென மதுரை நீதிமன்றத்தில் மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. மின்னஞ்சல் பதில் மனுவில், குற்றவாளிகளுக்கு கருணையோ, பாரபட்சமோ கூடாதென அரசு வலியுறுத்தியுள்ளது.
2020 ஜூன் 19 அன்று, சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ், ஊரடங்கை மீறிக் கடையைத் திறந்ததாக போலீஸாரால் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இரவு முழுவதும் நடந்த தாக்குதலில் இருவர் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், காவலர்கள் முருகன், சாமதுரை, முத்துராஜா, செல்லத்துரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து ஆகிய 9 பேரையும் சிபிஐ கைது செய்தது. இவ்வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன், ஒன்பது பேரும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்தார்.
தண்டனை விசாரணையில், சிபிஐயும், ஜெயராஜ்-பென்னிக்ஸ் குடும்பத்தினரும் இக்கொலையை "அரிதினும் அரிதான வழக்கு" எனக் கூறி தூக்கு தண்டனை கோரினர். குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு, திட்டமிட்ட கொலை அல்ல, திடீர் ஆத்திரத்தில் நடந்ததால் குறைந்தபட்ச தண்டனையே கேட்டது.
மத்திய அரசு தனது மனுவில், இது ஒரு "போலீஸ் காவல் மரணம்" எனக் குறிப்பிட்டு, பாரபட்சமின்றி அதிகபட்ச தண்டனை வழங்க வலியுறுத்தியுள்ளது. ஏப்ரல் 6-ல் தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.
தண்டனை விதிப்பது குறித்து நிலைப்பாட்டை தமிழக அரசு தரப்பில் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து ஏற்கனவே அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 30 ஆம் தேதியே இந்த 9 போலீஸாருக்கும் தண்டனை விவரங்கள் அறிவிப்பு என செய்தி வெளியானது. குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த தண்டனை விவரங்கள் அறிவிப்பை கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
அன்றைய தினம் மத்திய அரசு சார்பில் கால அவகாசம் கேட்ட நிலையில் மீண்டும் ஏப்ரல் 6ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் மத்திய அரசும், மாநில அரசும், குற்றவாளிகளுக்கு என்ன மாதிரியான தண்டனை வழங்கலாம் என்பதை அறிக்கையாக கோர்ட்டுக்கு அனுப்பியுள்ளது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications