நள்ளிரவில் கல்லூரி மாணவன் வெறிச்செயல்.. வீட்டில் பெட்ரோல் குண்டு.. மதுரை அருகே நடுங்க வைத்த சம்பவம்!
மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தானில் முன்விரோதம் காரணமாக வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய கல்லூரி மாணவன் விக்னேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கல்லூரி மாணவர் பெட்ரோல் குண்டு வீசும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா. இவரது மகன் விக்னேஸ்வரன், கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், முத்தையாவிற்கும் அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மோதல் போக்கு நிலவி வந்த நிலையில், மீண்டும் கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியன்று முத்தையாவிற்கும், மதனுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, முத்தையாவின் மகன் விக்னேஸ்வரன், நள்ளிரவில் மதன் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியதில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன. நல்வாய்ப்பாக மதன் குடும்பத்தினர் உயிர் தப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக மதன் சோழவந்தான் போலீசில் புகார் கொடுத்ததை அடுத்து, விக்னேஸ்வரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர், முன்விரோதம் காரணமாக வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தில் கல்லூரி மாணவர் விக்னேஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications