Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை தவெக மாநாடு: பேனர் வைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இளைஞர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை மாவட்டம், பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு நாளை பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகஸ்ட் 21 ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிக்குள் மாநாட்டை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம், பாரபத்தியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தவெக தலைவர் விஜய் மக்களைச் சந்தித்துப் பேசும் வகையில் மிகப்பெரிய மேடை மற்றும் ராம்ப் அமைக்கப்பட்டுள்ளது. நாளை பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி இரவு 7.30 மணிவை மாநாடானது நடைபெறவுள்ளது.

college-student-dies-after-being-electrocuted-while-trying-to-put-up-a-banner-for-the-team-conferenc

சுமார் 500 ஏக்கரில் மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது. அதேபோல் நிர்வாகிகள் வரும் வாகனங்களை நிறுத்துவதற்காக பிரத்யேகமாக 6 பார்க்கிங் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் மாநாடு தொடங்கவுள்ளது. கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தஞ்சாவூர், மதுரை மாவட்டங்களைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தவுள்ளனர். மாலை 4 மணிக்கு த.வெ.க. தலைவர் விஜய் விழா மேடைக்கு வந்து, பொதுமக்கள், தொண்டர்கள் மத்தியில் உரையாற்றவுள்ளார்.

மொத்தமாக 1.5 லட்சம் இருக்கைகள் மாநாட்டுத் திடலில் போடப்பட்டுள்ளது. அதேபோல் விஜய் நடந்து வந்து தொண்டர்களைப் பார்ப்பதற்கான ஏற்பாடுகள் முடிந்துள்ளன. கொள்கைத் தலைவர்களுக்கான பேனர்கள், தவெக கொடி உள்ளிட்டவை நடப்பட்டுள்ளது. அதேபோல் நாளை தவெக தலைவர் விஜய், மாநாட்டுத் திடலில் தவெக கொடியை ஏற்றி வைத்து மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார்.

மாநாட்டில் த.வெ.க. விஜயின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டையொட்டி, பேனர் வைக்கும் பணியில் தொண்டர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே த.வெ.க. மாநாட்டுக்காக பேனர் வைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இனாம்கரிசல்குளம் பகுதியில் பேனர் வைப்பதற்காக 19 வயதான கல்லூரி மாணவர் காளீஸ்வரன் கம்பி எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, மின்சாரம் தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+