சங்கராபுரம் ஊராட்சி தேர்தல்.. தேவி மாங்குடியின் வெற்றிச் சான்றிதழே செல்லும்.. ஹைகோர்ட் அதிரடி
மதுரை: சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பிரியதர்ஷினி வெற்றிபெற்றது செல்லாது என்றும் முதலாவது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியே வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது சங்கராபுரம் ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் தேவி மாங்குடி மற்றும் பிரியதர்ஷினி அய்யப்பன் ஆகியோர் வெற்றிபெற்றதாக 2 வெற்றிச் சான்றிதழ்கள் தனித்தனியாக தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்டன. முதலில் தேவிக்கு வழங்கப்பட்டநிலையில் இரண்டாவதாக பிரியதர்ஷினிக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதை எதிர்த்து தேவி மாங்குடி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில், ஊரக உள்ளாட்சி தேர்தலில், சங்கராபுரம் ஊராட்சித் தலைவர் பதவிக்கு தான் போட்டியிட்டதாகவும், தனக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பிரியதர்ஷினி என்பவருக்கு பூட்டு சாவி சின்னம் ஒதுக்கப்பட்டதாகவும் கூறினார்.
மேலும் தனது மனுவில் வாக்குப்பதிவு முடிந்து, வாக்கு எண்ணிக்கையின் போது ஆட்டோ சின்னத்தில் போட்டியிட்ட நான் வெற்றி பெற்றதாக தேர்தல் அலுவலர் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் தனக்கு வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்ட சிறிது நேரத்தில்,பூட்டு சாவி சின்னத்தில் போட்டியிட்ட பிரியதர்ஷினியும் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். எனவே பிரியதர்ஷினி ஊராட்சித் தலைவராகப் பதவியேற்க தடைவிதித்து உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, சங்கராபுரம் ஊராட்சித் தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க இடைக்காலத்தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணை நடந்து முடிந்த நிலையில், தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் சங்கராபுரம் ஊராட்சி மன்ற தலைவராக பிரியதர்ஷினி வெற்றி பெற்றது செல்லாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இன்று தீர்ப்பளித்துள்ளது. அதேசமயம், முதலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட தேவியின் வெற்றியே செல்லும் என்று நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications