ரேஷன் கடைகளில் கைரேகை வைக்காமல் பொருட்கள் வழங்கப்படுமா.. அமைச்சர் பதில்
மதுரை; கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்
Recommended Video
ரேஷனில் கைரேகை வைத்து பொருள் வழங்குவதில் சர்வர் குறைபாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், ஜனவரி 12ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகை முழுமையாக வழங்கப்படும் என்றார்,
மதுரை நெல்லை பேட்டையில் முதலமைச்சரின் மினி கிளினிக் மையத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மாநகர ஆணையாளர் விசாகன் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூதிறந்து வைத்தார்

எப்போது
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், இந்த அரசு பொங்கல் நாளில் சிறப்புத் தொகுப்பு 2500 வழங்குகிறது. எங்கள் கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் டிச.31 ம் தேதிக்குள் டோக்கன் வழங்கப்பட்டு விடும். வரும் 12ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசு 2500 மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.

கைரேகை இல்லாமல்
கைரேகை வைத்து பொருள் வழங்குவதில் சர்வர் குறைபாடு உள்ளதை ஒப்புக்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

விளம்பர முயற்சி
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக எடப்பாடி பழனிச்சாமி செயல் பட்டு வருவதாக பாராட்டினார். கிராமசபை கூட்டம் என்பது காந்தியடிகள் முன் மொழிந்து மக்களுக்காக அரசு செயல் படுத்துகிறது. இதனை விளம்பரத்திற்காக எதிர்கட்சிகள் பயன்படுத்துவது தவறானது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

முதல்வருக்கு பாராட்டு
இஸ்லாமியர்கள் மெக்கா செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் நிதி உதவியினை தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடியார் துவக்கி வைத்துள்ளார். மதுரையில் 10 கிளினிக் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களுக்கு இந்த கிளினிக்குகள் மிகப் பெரும் உதவியாக இருக்கும்.

செல்லூர் ராஜூ
மு.க.ஸ்டாலின் குப்பை வரி குறித்து விபரம் தெரியாமல் பேசி வருகிறார். இது மத்திய அரசின் திட்டம். இதனை ரத்து செய்ய அமைச்சர் வேலுமணி தான் முன்மொழிந்தார். இந்த விபரம் தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications