ரேஷன் கடைகளில் கைரேகை வைக்காமல் பொருட்கள் வழங்கப்படுமா.. அமைச்சர் பதில்
மதுரை; கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்
Recommended Video
ரேஷனில் கைரேகை வைத்து பொருள் வழங்குவதில் சர்வர் குறைபாடு இருக்கிறது என்பதை ஒப்புக்கொண்ட அமைச்சர், ஜனவரி 12ம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகை முழுமையாக வழங்கப்படும் என்றார்,
மதுரை நெல்லை பேட்டையில் முதலமைச்சரின் மினி கிளினிக் மையத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தலைமையில் மாநகர ஆணையாளர் விசாகன் முன்னிலையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூதிறந்து வைத்தார்

எப்போது
இந்நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அலுவலர்கள் அதிகாரிகள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ கூறுகையில், இந்த அரசு பொங்கல் நாளில் சிறப்புத் தொகுப்பு 2500 வழங்குகிறது. எங்கள் கூட்டுறவுத் துறையின் மூலம் தமிழகம் முழுவதும் டிச.31 ம் தேதிக்குள் டோக்கன் வழங்கப்பட்டு விடும். வரும் 12ம் தேதிக்குள் அனைவருக்கும் பொங்கல் பரிசு 2500 மக்களுக்கு வழங்கப்படும் என்றார்.

கைரேகை இல்லாமல்
கைரேகை வைத்து பொருள் வழங்குவதில் சர்வர் குறைபாடு உள்ளதை ஒப்புக்கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜூ கைரேகை வைக்காமல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்குவது பற்றி முதல்வரிடம் ஆலோசித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

விளம்பர முயற்சி
தொடர்ந்து பேசிய செல்லூர் ராஜூ, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாரிசாக எடப்பாடி பழனிச்சாமி செயல் பட்டு வருவதாக பாராட்டினார். கிராமசபை கூட்டம் என்பது காந்தியடிகள் முன் மொழிந்து மக்களுக்காக அரசு செயல் படுத்துகிறது. இதனை விளம்பரத்திற்காக எதிர்கட்சிகள் பயன்படுத்துவது தவறானது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

முதல்வருக்கு பாராட்டு
இஸ்லாமியர்கள் மெக்கா செல்வதற்கு ஒவ்வொருவருக்கும் நிதி உதவியினை தமிழக அரசு வழங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்கை முதல்வர் எடப்பாடியார் துவக்கி வைத்துள்ளார். மதுரையில் 10 கிளினிக் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களுக்கு இந்த கிளினிக்குகள் மிகப் பெரும் உதவியாக இருக்கும்.

செல்லூர் ராஜூ
மு.க.ஸ்டாலின் குப்பை வரி குறித்து விபரம் தெரியாமல் பேசி வருகிறார். இது மத்திய அரசின் திட்டம். இதனை ரத்து செய்ய அமைச்சர் வேலுமணி தான் முன்மொழிந்தார். இந்த விபரம் தெரியாமல் ஸ்டாலின் பேசி வருகிறார் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications