அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் காருக்கு தீ வைப்பு.. வீட்டை சூறையாடிய திமுக நிர்வாகி மீது புகார்
மதுரை: கோயில் திருவிழாவில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக அதிமுக முன்னாள் எம்எல்ஏவின் காரை தீ வைத்து எரித்ததாகவும், வீடு, பைக்கை உடைத்ததாகவும் திமுக கிளை செயலாளர் மீது போலீஸில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டம் கருவனூர் பகுதியில் உள்ள பாறை கருப்பசாமி கோயில் திருவிழா கடந்த வாரம் நடந்தது. இந்த விழாவில் யாருக்கு முதல் மரியாதை அளிப்பது என்று இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து மதுரை மாவட்டம் கருவனூர் கிராமத்தில் உள்ள முன்னாள் அதிமுக சட்டசபை உறுப்பினர் பொன்னம்பலத்திற்கும் திமுக கிளை செயலாளர் வேல்முருகனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரம் அடைநத திமுக கிளைச் செயலாளர்களின் ஆதரவாளர்கள் மாஜி எம்எல்ஏ பொன்னம்பலம் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அப்போது காரை எரித்தும் வீட்டிற்குள் புகுந்து பைக், டிவி ஆகியவற்றை உடைத்தும் நொறுக்கியதாக தெரிகிறது.
வன்முறை சம்பவம் குறித்து ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் முன்னாள் எம்எல்ஏ பொன்னம்பலம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் திமுக கிளைச் செயலாளர் வேல்முருகனை தேடி வருகிறார்கள். பொன்னம்பலத்தின் வீட்டில் போலீஸ் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளார்கள். பொன்னம்பலமும் வேல்முருகனும் உறவினர்கள் என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications