Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எம்.எல்.ஏ கிட்னி திருடுகிறார்.. திருட்டு இல்லை முறைகேடு என்கிறார் அமைச்சர்! விளாசிய ஆர்பி உதயகுமார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்.எல்.ஏ கிட்னி திருடுகிறார். ஆனால் மக்கள் நல வாழ்த்துக்கள் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் சொல்கிறார் திருட்டு போனது உண்மை.. ஆனால், அது திருட்டு அல்ல முறைகேடு என விளக்கம் கொடுக்கிறார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அறிய பொதும்பு கிராமத்தில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசுகையில்," இப்போது நடைபெற திமுக அரசு உங்களுக்கெல்லாம் தெரியும். 525 வாக்குறுதிகளை கொடுத்த திமுக ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 10 லட்சம் 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலை வாய்ப்பு தருவோம்,. கல்விக் கடனை ரத்து செய்வோம். நீட் தேர்வை ரத்து செய்வோம், என்று தேர்தல் வாக்குறுதி சொன்னார்கள்.

RB Udhayakumar Ma Subramanian dmk

சொன்னதெல்லாம் கொடுத்துட்டு இருக்க முடியுமா? எங்க தாத்தா கருணாநிதி கூட தான் இரண்டு ஏக்கர் நிலம் தர்றேன்னாரு எல்லா மக்களும் ஓட்டு போட சொன்னாரு. ஆனால் முதலமைச்சராக வந்த உடனே முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கேட்கிற போது அவர் சொன்னார். இரண்டு ஏக்கர் கடலிலும் கூட இல்லை. இருந்தால் தருவேன் என்று கருணாநிதி கூறினார்.

100 நாள் வேலையை 150 நாளாக மாற்றுகிறோம் என்று கூறினார்கள். ஆனால் தற்போது 5 நாள் கூட வழங்குதில்லை. சம்பளத்தையும் தரவில்லை. ஏன் தரவில்லை என்று கேட்டால் மோடியை கேளுங்கள் என்று கூறுகிறார் முதல்வர் ஸ்டாலின். ஆனால் எடபாடியார் டெல்லிக்கு சென்று அமித்ஷாவை சந்தித்து 100 நாள் சம்பளமாக 2990 கோடியை பெற்றுத் தந்தார். மகளீர் உரிமை தொகை 1000 ரூபாய் தருகிறோம் என்று கூறினார்கள். மக்கள் நம்பிக்கையோடு வாக்களிதார்கள். ஆனால் ஆட்சிக்கு வந்த பின்னர் தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே என்று கூறினார்கள்.

தற்போது இன்னும் 4 மாத ஆட்சி காலம் உள்ள நிலையில் எல்லோரும் வாருங்கள் தருகிறோம் என்று கூகிறார்கள். தனலெட்சுமி மருத்துவமனையில் திமுக சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் மனிதனின் கிட்னியை 5 லட்சத்திற்கு விற்றதாக இரண்டு மருத்துவமனைகள் சீல் வைக்கப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறை ம.சுப்பரமனியன் சொல்கிறார், கிட்னி திருடு போனது உண்மை. ஆனால் அது திருட்டு அல்ல.. அது முறைகேடு என்கிறார்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+