எதிரிகளே.. நாங்கள் ஆட்சி அமைக்கும் முன் இறந்துவிடுங்கள்.. இல்லையென்றால்.. சீமான் வார்னிங்!
எதிரிகள் எல்லாம் எங்கள் ஆட்சி அமைவதற்கு முன் இறந்துவிடுங்கள், இல்லையென்றால் விளைவுகளை சந்திப்பீர்கள், என்று நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மதுரை: எதிரிகள் எல்லாம் எங்கள் ஆட்சி அமைவதற்கு முன் இறந்துவிடுங்கள், இல்லையென்றால் விளைவுகளை சந்திப்பீர்கள், என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தலுக்கும், 2021 சட்டசபை தேர்தலுக்கும் நாம் தமிழர் கட்சி தீவிரமாக தயாராகி வருகிறது. திராவிட கட்சிகளுக்கு அடுத்தபடியாக நாம் தமிழர் கட்சி தமிழகத்தில் முக்கியமான கட்சியாக உருவெடுத்து வருகிறது. இந்த நிலையில் மதுரையில் இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் மக்கள் முன்னிலையில் பேசினார்.
அவர் தனது பேச்சில், வரும் சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதிய புரட்சி செய்யும். எங்கள் கட்சி பெரிய அளவில் உருவெடுக்கும். மக்கள் எங்களுக்கு ஆதரவு அளிக்க தொடங்கி இருக்கிறார்கள். சட்டசபை தேர்தலின் எங்களின் பலம் மற்ற கட்சிகளுக்கு தெரியும்.
கார்
இந்த சட்டசபை தேர்தலுக்கு நாங்கள் நிறைய வாக்குறுதிகள் அளிப்போம். எல்லா வீட்டிற்கும் கார் வழங்க போகிறோம். ஆம் இலவச கார் வழங்க போகிறோம். இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும்.
வழக்கு
நாம் தமிழர் மீது சிலர் தவறான புகார் அளிக்கிறார்கள். வழக்கு தொடுகிறார்கள். அவர்களை நாங்கள் சமாளிப்போம். எதிரிகள் எல்லாம் எங்கள் ஆட்சி அமைவதற்கு முன் இறந்துவிடுங்கள்.இல்லையென்றால் விளைவுகளை சந்திப்பீர்கள்.
இரண்டு கட்சி
மகாராஷ்டிராவில் பாஜக சிறந்த பாடத்தை கற்று இருக்கும். ஆனால் காங்கிரஸ் கட்சியும் பாஜக கட்சியும் ஒன்றுதான். இரண்டும் மக்களை எப்படி ஏமாற்றலாம், எப்படி பணத்தை கொள்ளையடித்து பிழைக்கலாம் என்றுதான் நினைக்கிறது.
ரஜினி எப்படி
நடிகர்களை அரசியலுக்கு அழைக்கும் அவல நிலை உள்ளது. அது மாற வேண்டும். ரஜினியின் அரசியல் வருகைக்காக காத்து இருக்கிறேன். அவரின் அரசியல் வருகைக்காக I am waiting என்று சீமான் பேசியுள்ளார்.