நீ தான் ஜெயிப்பே.. சாமி ஆடி சுயேச்சை வேட்பாளர்தலையில் சத்தியம் செய்த பெண்.. உசிலம்பட்டியில் கலகல!
Recommended Video
மதுரை: உசிலம்பட்டி அருகே சுயேட்சை வேட்பாளருக்கு சாமி ஆடி தலையில் சத்தியம் செய்து வாக்குறுதி அளித்த வாக்காளர் பெண்மணியால் கலகலப்பு ஏற்பட்டது.
ஊரக உள்ளாட்சிகளுக்கு முதல் கட்ட தேர்தல் கடந்த 27-ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நேற்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 46, 639 பதவிகளுக்கு தேர்தல் இன்று 2-ஆம் கட்டமாக நடைபெறுகிறது.

பல இடங்களில் கட்சி சார்ந்த வேட்பாளர்களை விட சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்களே தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
உசிலம்பட்டி அருகே அண்ணாநகர் பகுதியில் வாக்கு சேகரித்து கொண்டிருந்த சுயேட்சை வேட்பாளருக்கு வாக்காளராகிய ஒரு பெண் சாமி ஆடினார்.
அப்போது நீ தான் வெற்றி பெறுவாய் இது கருப்பன் மீது சத்தியம் என வேட்பாளரின் தலையில் சத்தியம் செய்து உறுதிமொழி அளித்த சம்பவம் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications