2 நாள் சிறையில் அடைக்கப்படும் சவுக்கு சங்கர்.. டிச 20 வரை நீதிமன்ற காவல்.. மதுரை நீதிமன்றம் உத்தரவு
மதுரை: தேனியில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில் நேற்று சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். இன்று அவரை மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்ப்படுத்திய நிலையில் டிசம்பர் 20ம் தேதி வரை 2 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பிரபல யூடியூபராக இருப்பவர் சவுக்கு சங்கர். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி தேனிபழனிச்செட்டிப்பட்டியில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அவருடன் டிரைவர் ராம்பிரபு மற்றும் ராஜரத்தினம் என்பவர் இருந்தனர்.

இந்த வேளையில் கோவை போலீசார் சவுக்கு சங்கரை ஏப்ரல் 4ம் தேதி கைது செய்தனர். பெண் போலீஸ் பற்றி தவறாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அவரது காரில் போலீசார் சோதனையிட்டனர். அப்போது காரில் தலா 100 கிராம் எடையுடன் 4 பாக்கெட்டுகளில் கஞ்சா இருந்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக தனியே தேனி போலீசார் 7 பிரிவுகளில் கைது செய்தனர். இந்த வழக்கில் சவுக்கு சங்கர், டிரைவர் ராம்பிரபு, ராஜரத்தினம் மற்றும் ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த மகேந்திரன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்டவர்கள் சேர்க்கப்பட்டனர்.
இதற்கிடையே தான் பெண் போலீஸ் பற்றி அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இருப்பினும் அந்தகுண்டர் சட்டம் நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்டதோடு, சவுக்கு சங்கரும் ஜாமீனில் வெளியே வந்தது.
இதற்கிடையே தேனி கஞ்சா வழக்கு மதுரை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சவுக்கு சங்கரை தவிர மற்றவர்கள் ஆஜராகினர். சவுக்கு சங்கர் மட்டும் ஆஜராகாத நிலையில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பழனிசெட்டிபட்டி போலீசார் சவுக்கு சங்கரை நேற்று சென்னையில் கைது செய்தனர்.
அதன்பிறகு வாகனத்தில் தேனி அழைத்து சென்றனர். இன்று சவுக்கு சங்கரை போலீசார் மதுரை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். அப்போது சவுக்கு சங்கரை 2 நாள் நீதிமன்ற காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சவுக்கு சங்கர் வரும் 20ம் தேதி சிறையில் அடைக்கப்பட உள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications