விஏஓ பணியிடங்களை நேரடியாக நிரப்ப இடைக்கால தடை! வருவாய் செயலர், TNPSC தலைவர் பதிலளிக்க உத்தரவு
மதுரை: கிராம நிர்வாக அலுவலர் பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை VAO பணியிடங்களை நேரடி முறையில் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், மனு குறித்து வருவாய் துறை செயலாளர் மற்றும் TNPSC-யின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் VAOகளுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்கும் வரை, விஏஓக்களுக்கான காலி பனியிடங்களை TNPSC மூலம் நேரடி நியமனம் முறைக்கு இடைக்கால தடை விதிக்க
கோரி வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில பொது செயலர் அருள்ராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அகமது பயாஸ் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அதில்," நான் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில தலைவராக உள்ளேன். எனது சங்கத்தை சேர்ந்தவர்கள் பல்வேறு மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருகின்றனர்.

அதில், " வருவாய் துறை ஆணையர் 218 கிராம நிர்வாக அலுவலர் காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு செய்தார். பின்னர் இடம் மாறுதல் பெற விரும்புவோர் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டார். ஆனால் அதிகாரிகளின் அனுபவத்தை கருத்தில் கொள்ளாமல் இடம் மாறுதல் நடத்தப்பட்டது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த 218 காலிப்பணியிடங்களையும் TNPSC மூலம் நேரடியாக நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது சட்ட விரோதம், இதனால் இடமாறுதலுக்காக காத்திருக்கும் அலுவலர்கள் பாதிக்கப்படுவார்கள்,
ஆகவே 218 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை பணியிட மாறுதல் நடத்தாமல் நேரடி முறையில் நிரப்புவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். தகுதி வாய்ந்த கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாறுதல் கோரிய மனுக்களின் அடிப்படையில், இட மாறுதல் வழங்கவும், அதன் பின்னர் நேரடி முறையில் கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குமரேஷ்பாபு, "பணியிட மாறுதல் கலந்தாய்வு முடியும் வரை கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களை நேரடி முறையில் நிரப்புவதற்கு இடைக் கால தடை விதித்தும், வருவாய் துறை செயலாளர் TNPSC-யின் தலைவர் பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தார்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications