Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் செருப்பு அணிந்து ஆய்வு செய்த தொல்லியல்துறை? இந்து மக்கள் கட்சி கண்டனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தமிழக தொல்லியல் துறை அதிகாரிகள் செருப்பு அணிந்த காலுடன் ஆய்வு செய்ததாக இந்து மக்கள் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. அங்கிருப்பது தீபத்தூண் அல்ல, எல்லைக் கல்தான் என அறிவிக்க சதி வேலையில் ஈடுபட்டு அதற்காக தொல்லியல் துறை அதிகாரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது என இந்து மக்கள் கட்சி விமர்சித்துள்ளது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத் தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற உத்தரவிட வேண்​டும் என்று மதுரை மாவட்​டம் எழு​மலை​யைச் சேர்ந்த ராம.ரவிக்​கு​மார் தொடர்ந்த வழக்​கில், தீபம் ஏற்​றலாம் என உயர்​நீ​தி​மன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமி​நாதன் உத்​தர​விட்​டார்.

thirupparankundram

ஆனால், திருப்பரங்குன்றம் கோயில் நிர்​வாகம், அந்த இடத்தில் தீபம் ஏற்​ற​வில்​லை. மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் மற்​றும் 10 பேர் அடங்​கிய குழு​வினர் மலைக்​குச் சென்று தீபம் ஏற்​ற​ போலீ​சார் அனு​மதி மறுத்​தனர். தனி நீதிப​தி​யின் உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு சார்​பில் மேல் முறை​யீடு செய்தது.

உயர் நீதி​மன்ற இரு நீதிப​தி​கள் கொண்ட அமர்வு மேல்முறையீட்டு மனுவை தள்​ளு​படி செய்​தது. உத்​தரவை அமல்​படுத்​தாத​தால் அதி​காரி​கள் மீது நீதி​மன்ற அவம​திப்பு வழக்​குத் தொடுக்​கப்​பட்​டது. அதே​நேரம், தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறை​யீடு செய்​தது. இந்த மனு விரை​வி்ல் விசாரணைக்கு வர உள்​ளது.

இதற்​கிடையே, மலை உச்​சி​யில் உள்ள தூண், கார்த்​திகை தீபத் தூண்​தான் என்று ஒரு தரப்​பினரும், இல்லை அது நில அளவீட்​டுக்​கல் என்று மற்​றொரு தரப்​பினரும் தகவல்​களை பரப்பி வரு​கின்​றனர். இந்நிலை​யில் நேற்று தமிழக அரசின் தொல்​லியல் துறை துணை இயக்​குநர் யதீஷ்கு​மார் தலை​மை​யில், உதவி இயக்​குநர் லோக​நாதன் மற்​றும் தொல்​லியல் அலுவலர்​கள் 7 பேர் கொண்ட குழு​வினர் நேற்று திருப்பரங்குன்றம் மலையில் ஆய்வு மேற்​கொண்​டனர்.

காலை 8 மணியி​லிருந்து பகல் 12 மணி வரை தீபத் தூணின் முழு பகு​தியை ஆய்வு செய்​து, அதில் உள்ள விவரங்​களை நகல் எடுத்தனர். இந்நிலையில் திருப்பரங்குன்றம் தீபத்தூணை தமிழக தொல்லியல் அதிகாரிகள் ஆய்வு செய்ததில் சந்தேகம் இருப்பதாக மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் சோலைகண்ணன் கூறியுள்ளார்.

தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு கண்டனம் தெரிவித்துள்ள இந்து மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன், தமிழக அரசு தன்னுடைய கட்டுபாட்டில் இருக்கும் தமிழக தொல்லியல் துறையை இத்தனை நாள் கழித்து என்ன காரணத்திற்கு ஆய்வு செய்ய அனுப்பியது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருப்பரங்குன்றம் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றும் விவகாரம் உயர் நீதிமன்ற அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு டிசம்பர் 12-ல் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்நிலையில், திருப்பங்குன்றம் மலை உச்சியில் இருப்பது எல்லைக் கல்லா? தீபத்தூணா? என ஆய்வு செய்ய தமிழ்நாடு தொல்லியல் துறை அதிகாரிகள் திருப்பரங்குன்றம் மலையில் இன்று ஆய்வு செய்துள்ளனர்.

இந்துக்கள் புனிதமாக கருதும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணுக்கு அதிகாரிகள் செருப்பு அணிந்த காலுடன் சென்றுள்ளனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத்தூண் இருந்ததற்கான பல்வேறு ஆதாரங்கள், ஆவணங்கள் உள்ளன. இவற்றின் அடிப்படையில்தான் தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என உயர் நீதிமன்றமும் உத்தரவிட்டது.

திமுக அரசு நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல், அங்கிருப்பது தீபத்தூண் அல்ல, எல்லைக் கல்தான் என அறிவிக்க சதி வேலையில் ஈடுபட்டு அதற்காக தொல்லியல் துறை அதிகாரிகளை ஆய்வுக்கு அனுப்பியுள்ளது. இந்த ஆய்வில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன.

இந்த ஆய்வுக்கு உயர் நீதிமன்றத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் அனுமதி பெற்றுள்ளார்களா? தீர்ப்புக்கு முன்பு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபத்தூணை நேரில் ஆய்வு செய்துள்ளார். அதன் பிறகு தொல்லியல் அதிகாரிகள் ஏன் ஆய்வு செய்ய வேண்டும். தமிழக தொல்லியல் துறையின் செயல்பாடு நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். இதனால் தொல்லியல் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+