நாளை நடைபெறும் தபால்துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை.. ஐகோர்ட் மதுரை கிளை
மதுரை: நாளை நடைபெற உள்ள அஞ்சலக தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து, உயர்நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
தபால் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் அஞ்சலக தேர்வு இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு தொடரப்பட்டது.

மதுரையை சேர்ந்த ஆசிர்வாதம் என்பவர், தபால்துறை தேர்வை தமிழிலும் நடத்த உத்தரவிட வேண்டும் என அவசர வழக்கு தாக்கல் செய்தார்.வழக்கை விசாரித்த நீதிமன்றம் தேர்வை தள்ளி வைக்க தேவையில்லை என கூறியுள்ளது.
ஆனால் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நாளை நடைபெறும் தபால் துறை தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது.
நாளை நடைபெறும் தபால்துறை தேர்வின் முடிவுகள் நீதிமன்றத்திற்கு உட்பட்டது என வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவிச்சந்திர பாபு, மகாதேவன் அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். பின்னர் வழக்கு விசாரணையை வரும் 19-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
கடந்த 4 ஆண்டுகளாக தபால் துறை தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. எனவே காலிப் பணியிடங்களை நிரப்ப வலுவான கோரிக்கை எழுந்ததையடுத்து, கிராமிய அஞ்சல் பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பை தபால்துறை வெளியிட்டது.
மேலும் தபால் துறை தேர்வுகளில் முதல் வினாத்தாள் இந்தி மற்றும் ஆங்கிலம் என இருமொழிகளில் மட்டுமே கேட்கப்படும் என்றும், அந்தந்த மாநில மொழிகள் அதில் இடம்பெறாது எனவும், 2-ம் தாளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை எனவும் தலைமை அஞ்சலகங்களுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அஞ்சலக தேர்வின் முதல் தாளை தேர்வர்கள் அந்தந்த மாநில மொழிகளில் எழுத முடியாது. இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே எழுத முடியும். மத்திய அரசின் இந்த அறிவிப்பிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நாளை தபால்துறை தேர்வு நடைபெற உள்ள நிலையில் அவசர வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications