முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. வழக்கு! அதிரடியாக ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளை!
மதுரை: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது. டி.எஸ்.பி காதர் பாட்ஷா தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து பொன்.மாணிக்கவேல் மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் ஐ.ஜி.யாக பணியாற்றிய பொன். மாணிக்கவேல் ஓய்வு பெற்ற பின்னரும், அவர்மீது பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதே பிரிவில் டி.எஸ்.பி.யாக பணியாற்றிய காதர் பாட்ஷா உள்ளிட்டோர் சிலை கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த நிலையில், பொன்.மாணிக்கவேல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காதர் பாட்ஷா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துமாறு சி.பி.ஐ.-க்கு உத்தரவிட்டது.

பொன். மாணிக்கவேல்
இதன் பேரில், சி.பி.ஐ. பொன். மாணிக்கவேல் மீது வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகையை மதுரை கூடுதல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இதனை எதிர்த்து, "சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கில் எந்த ஆதாரமும் இல்லை; எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என்றும், "குற்றப்பத்திரிகை நகலை தமக்கு வழங்க உத்தரவிட வேண்டும்" என்றும் பொன். மாணிக்கவேல் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
சி.பி.ஐ
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சுளா தனது தீர்ப்பில், "சி.பி.ஐ. பதிவு செய்த குற்றச்சாட்டுக்கு போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை. குற்றப்பத்திரிகையும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை. அதற்கான முதல் தகவல் அறிக்கையும் தேவையற்றது." எனவும் குறிப்பிட்டார். மேலும் அவர், "சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்புக் குழுவின் முயற்சியை சீர்குலைக்கும் வகையில் எந்த குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது. ஆதாரமற்ற குற்றப்பத்திரிகைகளை அனுமதித்தால், விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல் நடத்த கும்பல்கள் முயலலாம். இது நீதி முறைமையின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும்," என்றும் தெரிவித்தார்.
உயர்நீதிமன்றம்
மேலும், மாணிக்கவேலுக்கு எதிராக குற்றச்சாட்டுகளை கூறிய காதர் பாட்ஷாவுக்கு எதிரான வழக்கே இன்னும் நிலுவையில் உள்ளது என்றும், அப்படியிருக்கும்போது மாணிக்கவேல் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருப்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்கு ரத்து
இதனை அடிப்படையாகக் கொண்டு, பொன். மாணிக்கவேல் மீது சி.பி.ஐ. பதிவு செய்த வழக்கையும் குற்றப்பத்திரிகையையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்வதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications