மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு! சீறிப்பாயும் காளைகளை அடக்கும் காளையர்கள்! கண்கொள்ளாக் காட்சி!
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அமைச்சர் மூர்த்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் சங்கீதா உறுதிமொழி வாசிக்க அதனை மாடுபிடிவீரர்களும் பின்பற்றி வாசித்தனர். ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஊர்களிலும் மிக பிரம்மாண்டமாக ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதனை கால லட்சக்கணக்கானோர் மூன்று நாட்கள் மதுரையில் குவிவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்ல அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் மதுரையில் குவிவார்கள். அந்தளவுக்கு இந்த மூன்று ஊர்களிலும் மிகவும் விறுவிறுப்பாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். செய்தித் தொலைக்காட்சிகளில் நேரலை செய்யப்படும்.
இதனிடையே இன்று அவனியாபுரத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளும் பக்காவாக செய்யப்பட்டுள்ளன. ஜல்லிக்கட்டில் காயம் அடைவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்திற்கே அருகேயே 30 மருத்துவர்கள் 50 செவிலியர்கள் அடங்கிய மருத்துவ குழுவினர் முகாம் அமைத்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் கால்நடை மருத்துவக் குழுவும் அங்கு முகாமிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் இன்று 1,000 காளைகள் அவிழ்த்து விடப்படும் எனத் தெரிகிறது.. இவற்றை அடக்குவதற்காக 300க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் தங்கள் பெயர்களை முறைப்படி பதிவு செய்துள்ளனர். முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் சிறந்த மாடுபிடி வீரருக்கு ஒரு காரும் பரிசாக வழங்கப்படுகிறது. அதேபோல் சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் 2 பசுமாடுகள் பரிசளிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டை பொறுத்தவரை அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகிய இருவரும் சேர்ந்து மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். ஆனால் இந்தாண்டு அமைச்சர் மூர்த்தி மட்டும் ஜல்லிக்கட்டை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications