இன்று முதல் 13-ந்தேதி வரை தசரா விடுமுறை.. மதுரை ஐகோர்ட்டில் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் விவரம்
மதுரை: இன்று முதல் 13-ந்தேதி வரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு தசரா விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனினும் தசாரா விடுமுறைக்காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்குகள் விசாரிக்கப்படும். அப்படி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்குகளை விசாரிக்க போகும் நீதிபதிகள் விவரத்தை சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ளார். அந்த விவரங்களை இந்த பதிவில் பார்ப்போம்
சென்னை, மதுரையில் உயர்நீதிமன்றங்களுக்கு ஆண்டுதோறும் தசரா விடுமுறை விடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான தசரா விடுமுறை இன்று (அக்டோபர் 5 ) முதல் வருகிற 13-ந்தேதி வரை விடப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: அக்டோபர் 5-ந்தேதி (இன்று) முதல் வருகிற அக்டோபர் 13-ந்தேதி வரை தசரா விடுமுறை விடப்படுகிறது.

இதனையொட்டி விடுமுறை கால நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் விவரம் வெளியிடப்படுகிறது. அதன்படி வருகிற 9-ந்தேதி மதுரை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் விடுமுறை கால கோர்ட்டில் நீதிபதிகள் வேல்முருகன், ராஜசேகர், ஜோதிராமன் ஆகியோர் அவசர வழக்குகளை விசாரிக்கின்றனர்.
அன்றைய தினம் வேல்முருகன், ஜோதிராமன் ஆகிய 2 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், அனைத்து வகை டிவிஷன் பெஞ்ச் வழக்குகளையும் விசாரிக்கின்றனர். நீதிபதி ராஜசேகர், அனைத்து வகையான கிரிமினல் வழக்குகளையும் விசாரிக்கிறார்.
எனவே விடுமுறை கால நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அவசர வழக்கு ஆவணங்களை வருகிற அக்டோபர் 7-ந்தேதி காலை 10.30 மணி முதல் 1.30 மணிக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைன் வழியாக மனு தாக்கல் செய்பவர்கள், தங்களின் மனுக்களை அன்றைய தினம் காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்யும்போது, கீழ்கோர்ட்டுகளின் உத்தரவு நகல்களை கண்டிப்பாக இணைக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற இ-மெயில் மூலமாக தகவல்களை பெறலாம். எக்காரணம் கொண்டும் விடுமுறை கால நீதிபதிகளின் வீடுகளுக்கு சென்று அவசர வழக்குகளை தாக்கல் செய்ய அனுமதி இல்லை" இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் அல்லி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications