4 - 9ம் வகுப்பு மாணவர்களின் சமூகஅறிவியல் தேர்வு தேதி மாற்றம்.. மதுரை சித்திரை திருவிழா எதிரொலி
மதுரை: மதுரை சித்திரை திருவிழா ஏப்ரல் 22ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் 4ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு அன்றைய தினம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 மற்றும் பிளஸ் 1 மாணவ-மாணவிகளுக்கான தேர்வு முடிந்துவிட்டது. 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. வரும் 8 ம் தேதியுடன் 10ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு தேர்வு முடிவடைய உள்ளது.

இந்நிலையில் தான் அனைத்து அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் 4 முதல் 9 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்பிறகு இந்த தேர்வு தேதியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதாவது ரம்ஜான் பண்டிகை காரணமாக தேர்வு தேதியில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி ஏப்ரல் 10ம் தேதி நடைபெறுவதாக குறிப்பிடப்பட்ட அறிவியல் தேர்வு ஏப்ரல் 22ம் தேதியும், ஏப்ரல் 12ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ம் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால் ஏப்ரல் 23ம் தேதி மதுரையில் பிரசித்திப்பெற்ற சித்திரை திருவிழா நடைபெற உள்ளது. இதையடுத்து ஏப்ரல் 23ல் நடக்கும் சமூக அறிவியல் தேர்வு தேதியை மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து பள்ளி கல்வித்துறை இயக்குநரின் அனுமதி பெற்று ஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் நடத்தப்படாது. மாறாக அந்த தேர்வு ஏப்ரல் 24ம் தேதி நடைபெறும் என மதுரை முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications