மதுரை மண்ணில் குவியும் சினிமா ஸ்டார்கள்.. ஜனவரி 23, 24, 25ல் வேலம்மாள் மைதானத்தில் நடக்கும் சம்பவம்!
மதுரை: மதுரையில் அமைக்கப்பட்டுள்ள வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் நடிகர்கள், நட்சத்திரங்கள் விளையாடும் செலிபிரிட்டி பிரீமியர் லீக் தொடர் 3 நாட்களுக்கு நடத்தப்பட உள்ளது. வேலம்மாள் கிரிக்கெட் மைதானம் திறக்கப்பட்டு இதுவரை குறிப்பிடத்தக்க அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடக்காத நிலையில், சிசிஎல் நடக்கவிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில மாதங்களுக்கு முன் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி திறந்து வைத்தார். இந்த மைதானம் தென் மாவட்ட இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. சர்வதேச தரத்தில் பிட்ச், மின் விளக்குகள், வீரர்களுக்கான ஓய்வறைகள், டிஜிட்டல் ஸ்கோர் போர்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல் வலைப்பயிற்சி கூடம், 15 ஆயிரம் பேர் அமரும் வகையில் இருக்கைகள், நவீன வடிகால் வசதி மற்றும் ஒளிபரப்புக்காக 197 கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய மைதானமாக மேலம்மாள் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது. இதனால் தென் மாவட்ட மக்கள் மத்தியில் உற்சாகம் ஏற்பட்டது.
விரைவில் டிஎன்பிஎல் போட்டிகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வேலம்மாள் மைதானம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் இணைக்கப்படவில்லை என்று தெரிய வந்தது. இதனால் மதுரை மாவட்ட மக்கள் சோகம் அடைந்தனர். இந்த நிலையில் நடிகர்கள் விளையாடும் செலிபிரிட்டி பிரீமியர் லீக் தொடர் வேலம்மாள் மைதானத்தில் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 23, 24, 25 ஆகிய 3 நாட்களில் 6 போட்டிகள் நடத்தப்பட உள்ளது. பெங்கால், கேரளா, பஞ்சாப், தெலுங்கு, கர்நாடகா, சென்னை, போஜ்பூரி ஆகிய 6 மாநிலங்களைச் சேர்ந்த நடிகர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். இதில் தமிழ் நடிகர்கள் ஆடும் 2 போட்டிகளில் வேலம்மாள் மைதானத்தில் நடக்கவுள்ளது.
இதனால் மதுரை மண்ணிலேயே தங்களின் ஆஸ்தான திரை நட்சத்திரங்களை ரசிகர்கள் காணும் வாய்ப்பு அமைந்துள்ளது. அதேபோல் வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் முதல் முக்கியமான தொடர் என்பதால், மதுரை மக்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால் அதிகளவில் ரசிகர்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications