Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதுரை அரசு பஸ்ஸில் சக்ஸஸ்.. ஒரே நாளில் ரூ.449 நல்ல கலெக்‌ஷன்.. 10 ஆண்டுகளுக்கு பின் மதுரைக்கு ஹேப்பி

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகளை, போக்குவரத்து கழகம் இயக்கியிருந்தது.. அந்தவகையில், மதுரை மாவட்டத்துக்கும் பேருந்து வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், இரட்டிப்பு மகிழ்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

வார விடுமுறை மற்றும், பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கமாகும்.. ஒரே நேரத்தில் லட்சக்கணக்கில் மக்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்ய நேரிடுவதால், பொதுமக்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும், தமிழக போக்குவரத்து கழகம் இத்தகைய சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

madurai division government buses


சிறப்பு பஸ்கள்: அந்தவகையில், 3 நாள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒட்டுமொத்தமாக, 19,484 பஸ்கள் இயக்கப்பட்டன.. இதில், மதுரை மாவட்டத்துக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.. மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட இடங்களில் இருந்து பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மதுரை அரசுப் போக்குவரத்து கழகம் அப்போதே அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

தைபொங்கல் பண்டிகைக்கு முன்பு 10.01.2025 முதல் 13.01.2025 வரை 455 பேருந்துகளும் மற்றும் பண்டிகைக்கு பின்பு 14.01.2025 முதல் 19.01.2025 வரை 725 பேருந்துகளும் மதுரை, திண்டுக்கல் தேனி, பழனி விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையம், ஆகிய பேருந்து நிலையங்களிலிருந்து திருச்சி, திருப்பூர், கோவை, திருநெல்வேலி, நாகர்கோவில், திருச்செந்தூர், கம்பம், குமுளி மற்றும் சென்னை போன்ற முக்கிய ஊர்களுக்கு பயணிகளின் தேவைக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது.

மதுரை கோட்டம்: பொங்கலையொட்டி அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டிருந்தது, பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது.. இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 20ம் தேதி ஒரே நாளில் மதுரை கோட்ட அரசு பஸ்கள் ரூ.4.49 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இதுகுறித்து மேலாண் இயக்குனர் சிங்காரவேலு கூறும்போது, "பல்வேறு நகரங்களுக்கும் சிறப்பு பஸ்களை இயக்கினாலும், சென்னைக்கு அதிகளவில் பஸ்கள் சென்றன. மதுரை கோட்டத்தில் உள்ள மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களில் இருந்து ஜன.10 முதல் 13 வரை தென் மாவட்டங்களுக்கு 467 பஸ்கள், பொங்கல் விடுமுறைக்கு பிறகு ஜனவரி 15 முதல் 20 வரை தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 605 பஸ்கள் இயக்கப்பட்டன.

அரசு பஸ்கள்: இதில் சென்னையில் இருந்து 4 நாட்களில் மதுரை அரசு பஸ்களில் மட்டும் 15 ஆயிரத்து 636 பயணிகளும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு 6 நாட்களில் 24 ஆயிரத்து 724 பயணிகளும் பயணித்துள்ளனர். இதுதவிர பொங்கல் விடுமுறை முடிந்தபின் பயணிகள் வேலைக்கு செல்வதற்காக பல்வேறு நகரங்களுக்கும் இடம் பெயர்ந்தனர்.

இதில் ஜனவரி 20ம் தேதி அதிகளவில் பயணித்துள்ளனர். இதன்மூலம் மதுரை கோட்டத்தில் உள்ள அரசு சிறப்பு பஸ்கள், ரெகுலர் பஸ்கள், டவுன்பஸ்கள் அனைத்து பஸ்கள் மூலமும் ஒரே நாளில் ரூ.4 கோடியே 49 லட்சத்து 24 ஆயிரம் வசூல் கிடைத்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் அதிக வசூலாகும்" என்று தெரிவித்துள்ளார்.

பெருமை: ஜனவரி 20ம் தேதி மட்டும் ஒரே நாளில் மதுரை கோட்ட அரசு பஸ்கள் ரூ.4.49 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதும், இது 10 ஆண்டுகளில் அதிக வசூல் என்றும் கூறியிருப்பது, மதுரை மாவட்டத்துக்கு பெருமை சேர்த்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+