ஐஏஎஸ் அதிகாரி சகாயத்திற்கு மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு.. தமிழக அரசுக்கு நீதிபதி எச்சரிக்கை
மதுரை: மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய மதுரை மாவட்ட நீதிமன்றம், மீண்டும் அவருக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.. அப்படி இல்லாவிட்டால் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும் என தமிழ்நாடு அரசுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் எச்சரித்துள்ளது
மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள கனிம வள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் மதுரை மாவட்ட முன்னாள் ஆட்சியர் சகாயம் நேரில் ஆஜராக ஏற்கெனவே அவருக்கு 2 முறை சம்மன் அனுப்பி இருந்தது மதுரை மாவட்ட நீதிமன்றம்.

ஆனால் சகாயம் ஐஏஎஸ் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில் அவருக்கு 3-வது முறையாக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகாததுடன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு விளக்கக் கடிதம் எழுதியிருந்தார்.
அவர் எழுதிய கடிதத்தில், "தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை காவல் துறை திரும்பப் பெற்றுக் கொண்டது. தற்போதைய சூழலில் கனிமவள எதிர்ப்பாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை. அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது.. எனவே, எனக்கு காவல் துறையின் பாதுகாப்பு வழங்கினால், நேரில் வந்து ஆஜராகத் தயார்" இவ்வாறு கூறியிருந்தார்.
மதுரை ஆதீனம் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படுகிறார்.. இந்து மக்கள் கட்சி எடுத்த அதிரடி முடிவு
இதனிடையே சகாயத்துக்கான பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், "ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு 2014 முதல் 2023 வரை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது. 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிருக்கு அச்சுறுத்தல் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. அதில் சகாயம் ஐஏஎஸ்சும் ஒருவர். இருப்பினும் நீதிமன்றத்தில் எவ்வித பயமும் இல்லாமல் சாட்சியம் அளிப்பதற்கு வசதியாக சகாயத்துக்கு போதுமான பாதுகாப்பு அளிக்கப்படும்" என காவல் துறை அளித்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள கல்குவாரி தொடர்பான வழக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள கனிம வள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி லோகேஸ்வரன் முன்னிலையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிபதி லோகேஸ்வரன், "முன்னாள் ஆட்சியர் சகாயத்திற்கு ஏன் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டவில்லை? ஏன் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது? அவருக்கு மீண்டும் உரிய போலீஸ் பாதுகாப்பு தமிழ்நாடு அரசால் வழங்கப்படுமா? அவ்வாறு இல்லாதபட்சத்தில் அவருக்கு மத்திய பாதுகாப்பு படை சார்பில் அவருக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடப்படும்" என்று கூறி வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications