மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு "வாய்ப்பூட்டு.." திடீர் கட்டுப்பாட்டால் அதிர்ச்சி
மதுரை: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள், அலுவலர்கள் பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு பேட்டியோ, அறிக்கையோ அளிக்கக்கூடாது என்ற கட்டுப்பாட்டுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த எம்.கிருஷ்ணன் திருவாரூர் மத்திய பல்கலைக்கழக துணைவேந்தராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாத இறுதியில் புதிய துணை வேந்தராக பேராசிரியர் குமாரை ஆளுநர் ஆர்.என்.ரவி நியமனம் செய்துள்ளார்.

கட்டுப்பாடு
இந்த நிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்து பல்கலைக்கழகத்தின் அனைத்து நோடல் அதிகாரிகள், பேராசிரியர்கள், தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதில், "பேராசிரியர்கள், அலுவலர்கள், ஆய்வு மாணவர்கள் அனுமதி இல்லாமல் தகவல்களை பத்திரிகைகள், ஊடகங்களுக்கு செய்தியாகவோ அறிக்கையாகவோ பேட்டியாகவோ தெரிவிக்கக்கூடாது. செய்தி அறிக்கையை வெளியிடுவதற்கு முன் அனுமதியை பெற வேண்டும்.

பேராசிரியர்கள் எதிர்ப்பு
முக்கிய பிரமுகர்கள், கல்வியாளர்கள் வருவதாக இருந்தால் இரண்டு வாரங்களுக்கு முன் தெரிவித்தாக வேண்டும். அனைத்து துறைகளிலும் வகுப்பறைகளை மாணவர்கள், ஆசிரியர்கள் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். மாணவர்களின் குறைகளை கேட்க மாணவர் குறைதீர்க்குழுவை ஏற்படுத்த வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த உத்தரவுக்கு பேராசிரியர்கள் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.

வாய்ப்பூட்டு
இது தங்களுக்கு போட்ட வாய்ப்பூட்டு என்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர். நிர்வாகத்துக்கும் ஆசிரியர்களுக்கும் இடையேயான ஒற்றுமையை பாதிக்கும் என அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது, "பல்கலைக்கழகத்தில் பல சங்கங்கள் உள்ளன. அலுவலர்கள், பேராசிரியர்கள் பொறுப்புகளில் முக்கிய பிரமுகர்கள் இருக்கிறார்கள். எங்களின் பல கோரிக்கைகள் பத்திரிகை செய்திகள் மூலமாகவே நிறைவேறுகின்றன.

பெயரை கெடுக்க மாட்டோம்
அண்மையில்கூட மாணவிகள் விடுதியில் போராட்டங்களில் ஈடுபட்டனர். விடுதிகளில் ஏற்கனவே பல மாதங்களாக குறைகள் இருந்து வந்தன. ஊடகங்களில் செய்திகள் வெளியான பிறகே துணைவேந்தருக்கும் பிரச்சனைகள் தெரிய வந்தன. எப்போதும் பேராசிரியர்கள் பல்கலைக்கழக பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக செய்தியை தர மாட்டார்கள். எங்கள் மீது நம்பிக்கை இழக்க வேண்டாம். இதை பதிவாளர் புரிந்துகொள்ள வேண்டும்." என கேட்டுக்கொண்டுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications