3 மாதம் தான்.. ரம்யாவை அடித்தே கொன்ற சதீஷ்.. தேனி கர்ப்பிணி கொலையில் பகீர்.. மாமனார்-மாமியாரும் கைது

Subscribe to Oneindia Tamil

மதுரை: தேனி மாவட்டம் கடமலைக்குண்டுவைச் சேர்ந்த ரம்யா என்ற பெண், மதுரையைச் சேர்ந்த சதீஷ் குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இந்நிலையில் மனைவியை சதீஷ் கட்டையால் அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் விசாரணை நடத்திய போது, சதீஷ், தனது மனைவி ரம்யாவை கொலை செய்ய, அவரது தாய், தந்தையும் முக்கிய காரணம் என்பதால் அவர்களையும் கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் சதீஷ்குமார் (வயது 31) டிரைவராக பணியாற்றி வருகிறார். தேனி மாவட்டம் கடமலை குண்டுவை சேர்ந்தவர் ரம்யா (25) செவிலியராக பணியாற்றி வந்தார். இவர்கள் இருவரும் திருப்பரங்குன்றம் அருகே விளாச்சேரியில் உள்ள ஒரு தனியார் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வந்தனர்.

சதீஷ்குமாரும், ரம்யாவும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுக்குள் காதல் மலர்ந்தது. இந்த நிலையில் சதீஷ்குமார், ரம்யா ஆகிய இருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் அவர்கள் விளாச்சேரி முனியாண்டிபுரம் குறிஞ்சி நகர் 2-வதுதெருவில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வந்தனர். ரம்யா 3 மாத கர்ப்பமானார்

Madurai: Mother-in-law arrested in Theni pregnant murder case

இந்த நிலையில் சதீஷ்குமாருக்கும், ரம்யாவிற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் சதீஷ்குமார், ரம்யாவிடம் தகராறு செய்து கட்டிட வேலைக்கு பயன்படுத்தகூடிய கட்டையால் அடித்து தாக்கி உள்ளார். அதில் படுகாயம் அடைந்த ரம்யா, துடி, துடிக்க, ரத்த வெள்ளத்தில் இறந்து போனார்.

இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் சதீஷ்குமார் மற்றும் அவரது பெற்றோர் தங்களது வாழ்க்கையில் இருந்து நிரந்தரமாக பிரிந்து செல்லுமாறு ரம்யாவை டார்ச்சர் செய்திருக்கிறார்களாம். மேலும் சதீஷ்குமாரின் பெற்றோர் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ரம்யாவிற்கு நெருக்கடி கொடுத்தார்களாம். இந்த நிலையில்தான் கட்டையால் தாக்கப்பட்டு ரம்யா கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இந்நிலையில் ரம்யாவின் மாமனார், மாமியார் மீதுகைது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று இரவு வரை மதுரை அரசு ஆஸ்பத்திரியில் ரம்யாவின் உடலை அவரது பெற்றோர் வாங்க மறுத்தனர். இதையடுத்து சதீஷ்குமார் (31), சதீஷ்குமாரின் தந்தை செல்வம் (55), தாயார் பஞ்சவர்ணம் ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+