சட்டம் படிக்க வாய்ப்பு மறுக்கப்பட்ட பெண்.. இன்று ஐநாவில் முழங்க போகும் மதுரை மாணவி பிரேமலதா
Recommended Video
மதுரை: மதுரை மாவட்டம் இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்த மாணவி பிரேமலதாவுக்கு ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற அழைப்பு வந்துள்ளது. இதற்காக ஜெனிவா சென்றுள்ள அவர் இன்றும் நாளையும் (அக்.1. அக் 2) உரையாற்ற உள்ளார். அவர் தனக்கு தமிழகத்தில் பலமுறை சட்டம் படிக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
மதுரை மாவட்டம் இளமனூர் அருகே கார்சேரியைச் சேர்ந்த இளங்கலை படிப்பு முடித்த மாணவி பிரேமலதா (21). இவர் தற்போது சட்ட கல்லூரியில் சேர்ந்து சட்டம் படிக்க உள்ளார்.
இவர் சிறுவயதில் இளமனூர் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் படித்தார். அப்போது 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பாடக் கல்வியோடு மனித உரிமைக் கல்வியையும் சேர்ந்து படித்தார்.

குறும்படத்தில் பிரேமலதா
இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைக் கழகம் மூலம் மனித உரிமைக் கல்வி எப்படி செயல்படுத்தப்படுகிறது அதன் தாக்கங்கள் குறித்த "எ பாத் டூ டிக்னிட்டி' என்ற குறும்படம் தயாரிக்கப்பட்டது. கடந்த 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த குறுப்படத்தில் அப்போது 8 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த பிரேமலதா நடித்திருந்தார். அதில் ஒரு காட்சியில் மனித உரிமைக் கல்வியின் முக்கியத்துவம், சாதிய பாகுபாடு மற்றும் பாலினப் பாகுபாடு குறித்து கூறிருந்தார்.

ஜெனிவா செல்கிறார்
பிரேமலதா தற்போது, இளங்கலைப் பட்டம் முடித்து, சட்டக் கல்லூரியில் சேர்ந்து படிக்க ஆசைப்படும் நிலையில், ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜெனிவா சென்றுள்ள மாணவி பிரேமலதா இன்றும் நாளையும் (அக்.1. அக் 2) ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

பலருக்கு உதவுவேன்
இது குறித்து பிரேமலதா ஜெனிவா செல்லும் சனிக்கிழமை அன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "எனது பெற்றோர்கள் கூலி தொழில் செய்து, என்னைப் படிக்க வைத்தார்கள். எங்கள் பள்ளியில் நான் கற்ற மனித உரிமைக் கல்விதான், கேள்விக் கேட்கும் உரிமையை எனக்கு தெரியவைத்தது. இதன்மூலம் பலருக்கும் உதவ முடியும் என்ற தன்னம்பிக்கை எனக்கு வந்துள்ளது. அப்போது நான் பயின்ற மனித உரிமைக் கல்வியால்தான், மனித உரிமைகளுக்கான ஐ.நா. மன்ற உயர் ஆணையர் அலுவலகத்திலிருந்து அக்டோபர் 1, 2 ஆகிய தேதிகளில் ஐ.நா. மன்ற ஜெனீவா கூட்டத்தில் உரையாற்றுவதற்கு அழைப்பு வந்துள்ளது. அதில், "எ பாத் டூ டிக்னிட்டி' குறும்படம் திரையிடப்பட உள்ளது என்றார்.
|
பிரேமலதா பேட்டி
மனித உரிமைக் கல்வி மூலம் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் என்ற தலைப்பில் விவாதம் நடத்தப்பட உள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னர் ஆண்டுதோறும் நடைபெற்றுவரும் சர்வதேச சமூக மன்றக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாகவும் பிரேமலதா கூறினார்.

சாதிகள் அதிகம்
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரேமலதா அளித்த பேட்டியில், ஐநா மன்ற ஜெனீவா கூட்டத்தில் பேசுதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்ததால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். நம் நாட்டில் பல சாதிகள் உள்ளன, இந்த சாதிகளை நாங்கள் விரும்பவில்லை. நான் எனக்கு கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவேன். நான் சட்டம் படிக்க விரும்புகிறேன், ஆனால் இந்த வாய்ப்பு எனக்கு பல முறை மறுக்கப்பட்டுள்ளது. எனக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்" என்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications