மதுரையில் புதூர் பஸ் ஸ்டாண்டுக்கு.. போலீஸை வரச்சொன்ன கவிதா.. கவரை கூலாக வாங்கி எஸ்.ஐ.. உடனே அடுத்து?
மதுரை: தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா என்பவர், சப்-இன்ஸ்பெக்டரை நாடியிருக்கிறார்.. இதையடுத்து, அந்த சப்-இன்ஸ்பெக்டர் செய்த காரியம், மதுரை மாவட்ட காவல்துறையில் அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது.
மதுரை புதூரில், புகாரின் மீது நடவடிக்கை எடுக்க ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போலீஸ் எஸ்.ஐ., சண்முகநாதன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகமாக உள்ள துறைகளாக, தமிழக வருவாய் மற்றும் பதிவுத்துறைகள் உள்ளன.. எனவேதான், இந்த துறைகளில் பல்வேறு லஞ்ச புகார்கள் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.. இதுபோன்ற குறைபாடுகளை களைவதற்கான முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றாலும், லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கை, குறையவில்லை..
பொறுப்புள்ள அதிகாரிகள்: பொறுப்புள்ள அதிகாரிகளே, இப்படி தினம் தினம் கைதாவது பொதுமக்களுக்கு கவலையையும், அதிர்ச்சியையும் தந்து வருகிறது.. இதில் காவல்துறையும் இணைந்துள்ளது.. எத்தனையோ அதிகாரிகள் நேர்மையாக இருந்தாலும், ஒருசிலர் செய்யும், தவறுகளால் மொத்த துறைகளுக்கும் கெட்ட பெயர் வந்துவிடுகிறது. இதோ இன்று மதுரையில் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்துபுரம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வருபவர் சண்முகநாதன்.. இவரிடம் HMS காலனியை சேர்ந்த கவிதா என்பவர், குற்ற வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி கூறியிருக்கிறார்.
முன்விரோதம்: அதாவது, ஏற்கனவே, ஜெயந்திபுரம் பகுதியில் கவிதா வசித்து வந்துள்ளார்.. அப்போது முன்விரோதம் காரணமாக சிலர் கவிதாவை தாக்கியிருக்கிறார்கள்.. இது தொடர்பாக 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது ஆனால், இதில் 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்ற 2 பேர் இன்னும் கைதாகவில்லை..
எனவே, அவர்களையும் கைது செய்ய வேண்டுமானால், ரூ.1 லட்சம் தேவை என்று சண்முகநாதன் லஞ்சம் கேட்டுள்ளார். இதைக்கேட்டு கவிதா அதிர்ச்சியும் தயக்கமும் அடைந்துள்ளார்.. இதற்கு பிறகு, 1 லட்சம் வேண்டாம், வெறும் ரூ.70,000 தந்தால் போதும் என்று சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.
லஞ்ச புகார்கள்: ஆனால், புகார் மீது நடவடிக்கை எடுக்க எதற்காக லஞ்சம் தர வேண்டும்? என்று கவிதா நினைத்தார். லஞ்சம் கொடுக்க விரும்பாமால், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சண்முகநாதன் குறித்து முறையிட்டார்.. இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அறிவுறுத்தலின்படி, முதற்கட்டமாக ரூ. 30,000 லஞ்சம் கொடுக்க சண்முகநாதனிடம் முன்வந்துள்ளார்.
அதன்படியே, புதூர் பஸ் நிலையம் அருகே, சண்முகநாதனுக்கு கவிதா ரூ.30,000 லஞ்சமாக கொடுத்தார். இந்த பணத்தை வாங்கிய சண்முகநாதன், அதை தன்னுடைய பைக் பெட்ரோல் டேங்கில் உள்ள கவரில், வைத்துகொண்டிருக்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.. இதையடுத்து, அவரை லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., சத்யசீலன் தலைமையிலான போலீசார், கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications