கலைஞர் பிறந்த நாளன்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராவார்... உதயநிதி ஸ்டாலின் நம்பிக்கை
மதுரை: ஜூன் 3ம் தேதி கலைஞர் பிறந்த நாளன்று தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்து, தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவார் என்று நடிகர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டபிடாரம், சூலூர் ஆகிய 4 தொகுதிகளில் வருகிற 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி, அனைத்து கட்சி தலைவர்களும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இடைத்தேர்தலின் வெற்றியை பொறுத்தே தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் நகர்வு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படும் சூழலில், வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் வீதி, வீதியாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

டெட்பாடியின் ஆட்சி
இந்தநிலையில், மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி தி.மு.க வேட்பாளர் சரவணனை ஆதரித்து, விரகனூரில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் தயாராகிவிட்டதாக கூறியுள்ளார். மேலும், டெட்பாடியின் ஆட்சியை சவப்பெட்டிக்குள் வைத்து நாலு புறமும் ஆணி அடிப்பதற்கு தான் இந்த 4 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடப்பதாக, உதயநிதி ஸ்டாலின் கடுமையாக பேசினார்.

நம்புகிறேன்
அதன்படி, கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் அனைவரும் உதய சூரியனுக்கு வாக்களித்திருப்பீர்கள் என நான் நம்புகிறேன். அதன் மூலமாக நரேந்திர மோடியின் ஆட்சி மட்டுமல்ல. எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியும் விரைவில் மாறப்போகிறது என்றார்.

வீட்டுக்கு அனுப்ப வேண்டும்
சென்ற மாதம் மோடியை வீட்டுக்கு அனுப்ப ஒரு முடிவெடுத்தீர்கள். அதுபோல, இந்த மாதம் ஒரு முடிவெடுத்து இங்குள்ள ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

கோமா நிலையில்
முன்னதாக, 22 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலிலும் தி.மு.க.வின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி கோமா நிலையில் உள்ளதாக விமர்சித்தார்.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications