**** பாத்துக்கலாம்! போஸ்டரால் போலீசில் சிக்கிய மநீம நிர்வாகிகள்! மாஸ் காட்ட நினைத்து பீஸான பரிதாபம்!
மதுரை : நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய வசனத்தை போஸ்டராக ஒட்டிய மதுரையைச் சேர்ந்த மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Recommended Video
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
லோகேஷ் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்பதை அதிக இடங்களில் பதிவு செய்துள்ளார். இந்த படத்துக்கும் கமல் முன்பு நடித்த விக்ரம் படத்தின் பெயரை தான் வைத்திருக்கின்றனர்.

விக்ரம் கமல்
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே வெளியான 2 நிமிடம் 39 நிமிடங்களுக்கு வெளியாகியிருக்கும் ட்ரெய்லரில் கமல் ஹாசன், ஃபஹத், விஜய் சேதுபதி மூவருக்கும் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக "இந்த காட்ல அஸ்தமனத்தை பாக்கப்போறது யாருனு முடிவு பண்றது இயற்கை இல்ல நான் தான்" என வசனங்களில் மாஸ் காட்டியுள்ளனர் கமல்ஹாசனும்,லோகேஷ் கனகராஜும்.

ட்ரைலரல் சர்ச்சை
படத்தில் கமல் பேசும் மற்றொரு வசமான, "இந்த நேரத்துல வீரங்கல்லா என்ன சொல்லுவாங்க தெரியுமா" .... பாத்துக்கலாம் என ஒரு வசனம் இடம்பெற்றிருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனங்களை பதிவு செய்தனர் இருந்தாலும் இந்த விவகாரம் அத்தோடு முடிந்து போனது. ஆனால் அதிரடி ட்ரெய்லரால் ரசிகர்கள் மிக்க மகிழ்ச்சியில் இருந்தனர். படத்திற்கான எதிர்பார்ப்பு பல மடங்கு பெருகியிருக்கிறது என்றால் மிகையாகாது.

மதுரையில் போஸ்டர்
இந்த நிலையில் அதில் இடம்பெற்றுள்ள வசனத்தை மைய்யப்படுத்தி "சில வேடிக்கை மனிதரை போல் நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ..! *____* பாத்துக்கலாம்..!" என்ற வசனத்தோடு மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகளான மதுரை கிழக்கு மற்றும் மேலூர் தொகுதி செயலாளர் கதிரேசன் மற்றும் மதுரை மண்டல பொறுப்பாளர் வினோத் சேது ஆகிய இருவரும் மதுரை மாநகர் பகுதி முழுவதிலும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.

போலீசார் வழக்குப் பதிவு
தொடர்ந்து அந்த போஸ்டரில் சர்ச்சைக்குரிய வகையிலும், ஆபாச வார்த்தைகள் இடம்பெற்று இருப்பது குறித்து பொதுமக்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து மதுரை திடீர் நகர் மற்றும் தெற்கு வாசல் காவல்துறையினர் மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகி இருவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் பகுதியில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்கள் போலீசாரால் அகற்றப்பட்டது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications