ஆதாரில் பிறந்த தேதி, பெயர் சிக்கல்.. ஐகோர்ட்டில் மொத்தமாக எழுந்த வக்கீல்கள்.. நடந்த நல்ல விஷயம்
மதுரை: ஐகோர்ட்டில் இருந்த பல வக்கீல்கள் நேற்று எழுந்து தென்மாவட்டங்கள் அனைத்துக்கும் மதுரையில் உள்ள ஆதார் மையம் மட்டுமே உள்ளது. அதாவது ஆதார் அட்டையில் பிறந்ததேதி, பெயர் மாற்றத்துக்கு மதுரை சேவை மையத்துக்கு வந்து நீண்டநேரம் வரிசையில் காத்திருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாவதாக கூறினார்கள். இதையடுத்து மக்கள் அலைக்கழிக்கப்படுவதை தவிர்க்க ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆதார் சேவை மையம் செயல்பட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அறிவுறுத்தினார்.
ஆதார் அட்டையில் திருத்தம் செய்வது என்பது மிக எளிதான காரியம் அல்ல..அதுவும் பிறந்த தேதியிலோ அல்லது பெயரிலோ திருத்தம் செய்ய வேண்டும் என்றால், நீங்கள் கற்பனை செய்ய முடியாத சிக்கலை சந்திக்க வேண்டியதிருக்கும். ஏனெனில் உங்கள் பெயரில் ஆதாரில் இனிஷியல் இருக்கும். குழந்தைக்கு இருக்காது.

அதை மாற்ற வேண்டும் என்றால், பிறப்பு சான்றிதழை மாற்ற சொல்வார்கள். ஆனால் நடைமுறையில் ஒராண்டிற்கு மேல் ஆன பிறப்பு சான்றிதழை திருத்துவது எளிதானது இல்லை.. இந்த சிக்கல் ஒருபுறம் எனில், பெயரில் அல்லது பிறந்த தேதியில் தவறு நடந்தால், மாற்றுவது மிகவும் கடினம், ஆதார் சேவை மையத்திற்கு தான் செல்ல வேண்டும். அங்கு பல மணி நேரம் காத்திருக்கும் நிலை இருக்கும். இதுதான் எதார்த்தமாக இருக்கிறது.
இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியைச் சேர்ந்த புஷ்பம், மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், எனக்கு இப்போது 74 வயதாகிறது. என்னுடைய கணவர், முன்னாள் ராணுவ வீரர். கடந்த மே மாதம் இறந்து விட்டார். இதனால் அவருக்கான ஓய்வூதியத்தை எனக்கு வழங்கும்படி விண்ணப்பித்தேன். ஆனால் என் ஆதார் அட்டையில் பிறந்த தேதி, பெயரில் முரண்பாடு இருப்பதால் சரிசெய்து வருமாறு அறிவுறுத்தினார்கள். இதற்காக பலமுறை விண்ணப்பித்தும் நடவடிக்கை இல்லை. எனவே எனது மனுவின் அடிப்படையில் எனது பெயர் மற்றும் பிறந்த தேதியில் குளறுபடியை சரிசெய்து தர உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்து பிறப்பித்த உத்தரவில், மேற்கூறிய பிழைகளை சரி செய்ய பலதரப்பினரிடம் முறையிட்டும் மனுதாரருக்கு பரிகாரம் கிடைக்கவில்லை. ஆதார் அட்டை ஒரு தவிர்க்க முடியாத அடையாள ஆவணமாக மாறி இருக்கிறது.
முறையான ஆதார் அட்டை இல்லாததால் ஒருவர் பல்வேறு சலுகைகள் மற்றும் சேவைகளை இழக்க நேரிடும். அதற்கு மனுதாரரின் வழக்கு சிறந்த உதாரணம். அவரது கணவர் இறந்த உடனேயே மனுதாரருக்கு குடும்ப ஓய்வூதியத்தை வழங்கி இருக்க வேண்டும். ஆதார் அட்டையில் உள்ள முரண்பாடு காரணமாக 5 மாதமாக அவர் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்.
அவர் எந்த மையத்துக்கு செல்ல வேண்டும் என்று கேள்வி எழுந்தபோது, மதுரையில் உள்ள ஆதார் சேவை மையத்துக்கு வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.. உடனடியாக மனுதாரருக்கு உதவுமாறு மதுரை ஆதார் சேவை மையத்துக்கு உத்தரவு பிறப்பித்தார். அப்போது நீதிமன்றத்தில் இருந்த பல வக்கீல்கள் எழுந்து தென்மாவட்டங்கள் அனைத்துக்கும் மதுரையில் உள்ள ஆதார் மையம் மட்டுமே உள்ளது. அதாவது ஆதார் அட்டையில் பிறந்த தேதி, பெயர் மாற்றத்துக்கு மதுரை சேவை மையத்துக்கு வந்து நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர் என கூறினார்கள்.
அப்போது நீதிபதி கூறும் போது, தமிழகத்தில் 4,056 ஆதார் சேர்க்கை மையங்கள் உள்ளன. இந்த மையங்கள் ஆதார் தகவல்களை மாற்றம் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். தமிழகத்தில் வருகிற மார்ச் மாதத்துக்குள் 28 இடங்களில் ஆதார் சேவை மையம் திறக்கப்படும் என ஆதார் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த திட்டம் மக்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும். ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு ஆதார் சேவை மையம் இருக்க வேண்டும் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. கூடுதல் ஆதார் சேவை மையங்கள் அமைய 6 மாதங்கள் உள்ளன. அதுவரை மனுதாரரை காத்திருக்குமாறு கூறமுடியாது. மனுதாரர் மதுரை ஆதார் சேவை மையத்தை அணுக வேண்டும். அவருக்கான வசதிகளை ஆதார் மைய அதிகாரிகள் செய்து தர வேண்டும். அதன் பிறகு குடும்ப ஓய்வூதிய ஆவணங்களில் மாற்றம் செய்ய வேண்டும்" இவ்வாறு கூறினார்.
-
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்?












Click it and Unblock the Notifications