GHல் மயங்கி விழுந்த ரவுடி பேபி சூர்யா.. சிக்காவுடன் ஷேர் ஆட்டோவில் அழைத்து சென்ற மதுரை போலீஸ்
மதுரை: ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என பெண்ணை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி பேபி சூர்யா, மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு வந்தபோது மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையை சேர்ந்தவர் பெண் யூடியூபர். இந்த நிலையில் ரவுடி பேபி சூர்யா, சிக்கந்தர் என்கிற சிக்கா, சூசை மேரி, ஹரிகுமார் ஆகியோர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தனது ஆபாச படத்தை வெளியிடுவதாக மிரட்டுவதாகவும் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் தேதி மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த நிலையில் புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீஸார் கடந்த ஆகஸ்ட் 26 ஆம் தேதி 4 பேர் மீதும் 9 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் 4 பேரையும் போலீஸார் தேடி வந்தனர். இந்த நிலையில் மதுரையில் வைத்து ரவுடி பேபி சூர்யாவையும் சிக்காவையும் கைது செய்தனர்.
இதையடுத்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். அப்போது திடீரென சூர்யா மயங்கி விழுந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 2 மணி நேரம் மருத்துவ பரிசோதனைகளை முடித்துவிட்டு நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர்.
சூர்யாவையும் சிக்கந்தரையும் போலீஸார் ஷேர் ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையும் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை ரவுடி பேபி சூர்யா ஆபாசமாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவரையும் சிக்காவையும் கைது செய்தனர். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
அதில் 1 ஆண்டு சிறையில் இருந்துவிட்டு தற்போதுதான் ஜாமீனில் வந்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த ரவுடி பேபி சூர்யா, தான் ஏன் விபச்சாரத்திற்கு வந்தேன், தனது கடந்த கால வாழ்க்கை என்ன என்பது குறித்து சில தகவல்களை பேசினார். பின்னர் பாலியல் தொழிலுக்காக சிங்கப்பூர் வரை சென்றதாகவும் அவர் அளித்த பேட்டி வைரலானது. இந்த நிலையில் தற்போது மீண்டும் ரவுடி பேபி சூர்யா, சிக்கா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications