150 வயது வரை வாழணுமா? என்னை முதல்வராக்குங்கள்.. வித்தையை சொல்லி தரேன்.. சீரியஸாக சொன்ன சரத்குமார்

Subscribe to Oneindia Tamil

மதுரை: தமிழக சட்டசபை தேர்தலில் என்னை முதல்வராக்கினால் 150 வயது வரை உயிருடன் இருக்கும் வித்தையை கற்றுத் தருவேன் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

மதுரை பழங்காநத்தம் சுற்றுச்சாலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7ஆவது பொதுக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விளக்க பொதுக் கூட்டம் அக்கட்சியின் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது.

Sarath kumar says about if u people made me CM then i will reveal the truth

இந்த கூட்டத்தில் சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து இந்த கூட்டத்தில் சரத்குமார் பேசுகையில் தீர்மான விளக்கக் கூட்டத்தில் உங்கள் நாட்டாமை முதல்வராக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.

2026 ஆம் ஆண்டு தேர்தலின் போது தெரிய வரும். மது உடல்ஆற்றலை இழக்க செய்து மன அழுத்தத்தை உண்டாக்கி வருகிறது. பல்வேறு போதைகள் இன்று பரிணமித்து கஞ்சா, குட்கா போன்ற பலவகை உருவெடுத்துள்ளது. அதனை கட்டுப்படுத்தும் பணியும் தரமாக நடைபெற்று வருகிறது. 2025-ஆம் ஆண்டு இளைஞர்கள் அதிகம் கொண்ட நாடாக உருவாகும்.

Sarath kumar says about if u people made me CM then i will reveal the truth

இதை முறியடிக்கவும் இளைஞர்களின் மூளையை மழுங்கடிக்கச் செய்யவும் வெளிநாடு சதி செய்கிறது. எனக்கு 69 வயது ஆகிறது. ஆனால் 25 வயது இளைஞரை போல் இருக்கிறேன். இன்னும் 150 வயது வரை உயிருடன் இருப்பேன். அது எப்படி சார் முடியும் என்றால் நிச்சயமாக முடியும். இதற்கான வித்தையை கற்று உள்ளேன். இதை எப்போது சொல்வேன் என்றால் என்னை 2026 ஆம் ஆண்டு தேர்தலில் முதல்வராக்கினால் அந்த வித்தையை சொல்லித் தருகிறேன்.

தமிழகத்தில் எத்தனை மதுக்கடைகள் இருந்தாலும் தனிமனித ஒழுக்கத்துடன் மதுவை புறக்கணித்தால் மட்டும் போதும். தானாகவே கடைகள் மூடப்பட்டுவிடும். பள்ளி சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன். அவர்கள் கண்காணிப்பதுடன் போதை பொருள்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவிலேயே தலைசிறந்த கல்வி தமிழகத்தில் வழங்கப்படுகிறது. அறிவு ஆற்றல் திறமை படைத்தோர் தமிழகத்தில் இருந்து கொண்டு இருக்கிறார்கள். அப்படி இருந்தும் ஏன் இந்த தடுமாற்றம். மதுவை ஒழிப்போம் என்கிறார்கள். ஆனால் இன்னும் தமிழகம் தள்ளாடுகிறது. சோஷியல் டிரிங்கிங் என்ற பெயரில் பணியிடங்களில் வெளிநாட்டு கலாச்சாரங்களை இளைஞர்களை தவிர்க்க வேண்டும்.

மாலை நேரத்தில் வேலைக்கு பிறகு வீட்டுக்கு தாமதமாக வரும் பிள்ளைகளை பெற்றோர்கள் ஊத சொல்லி சோதனை செய்யுங்கள். அதில் தவறே இல்லை. இந்தியாவில் மது இல்லாத மாநிலங்கள் உள்ளன. அங்கெல்லாம் குற்றச் சம்பவங்கள் குறைந்துள்ளன. தமிழகத்திலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். மதுவை தவிர்ப்போம் என்பதை முன்னெடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கையை உருவாக்குவோம்.

மது கடைகளை மூடுங்கள் என சொல்லி ஆர்ப்பாட்டம் செய்வதால் எந்த பயனும் இல்லை. கடைக்கு போகாமலிருந்தாலே போதும். 2026 ஆம் ஆண்டு சமத்துவ மக்கள் கட்சி ஆட்சியில் அமரும் போது மது ஒழிக்கப்படும். பள்ளிச் சிறுவர்கள் போதைக்கு அடிமையாக இருப்பதை நானே பார்த்துள்ளேன். அவர்களை கண்காணிப்பதுடன் போதை பொருட்களை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போது ஐடி துறை வந்ததோ , விஞ்ஞான வளர்ச்சி வந்ததோ கம்யூனிகேஷன் அதிகரித்ததோ மொபைல் போன் வந்ததோ அப்போதே உலகில் நடக்கும் விஷயங்களை கற்றுக் கொள்ளும் சூழல் ஏற்பட்டுவிட்டது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+