சீரியல் மோகம் குறைந்துள்ளது… செய்தி சேனல்களுக்கு மதுரை ஹைகோர்ட் பாராட்டு
மதுரை: பிரேக்கிங் செய்திகளால் பெண்களின் சீரியல் மோகம் குறைந்துள்ளதாக உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
தனியார் கட்டண சேனல்கள் விளம்பரம் வெளியிட இடைக்கால தடை கோரி முகமது ரபீக் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், டிராய் விதிகளுக்கு எதிரான கட்டண சேனல்களில் விளம்பரங்கள் வெளியிடப்படுவதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சீரியலில் இருந்து செய்தி சேனல்கள் நோக்கி மக்களின் கவனம் திரும்பியுள்ளது பாராட்டப்படவேண்டியது என்றும், மக்களின் மனங்கள் மாசுபடாமல் இருக்க செய்தி சேனல்கள் துணையாக உள்ளன எனவும் தெரிவித்தனர்.
டிராய் விதிகளை மீறிய 125 சேனல்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்தும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், மத்திய ஒளிபரப்புத்துறை, தமிழக உள்துறை செயலாளர் பதில் அளிக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து, வழக்கை மார்ச் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications