சாதனைகளை சொல்லுங்கள்.. குறை சொல்லியா வாக்கு கேட்பது ஸ்டாலின்.. ஓ.பி.எஸ் பேச்சு
மதுரை: தங்களை குறை சொல்லியே ஸ்டாலின் வாக்கு கேட்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம் ஆகிய 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் வருகிற 19 ஆம் தேதி நடைபெறவிருக்கின்றன. இதனையொட்டி, திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து மதுரை பெரிய ஆலங்குளத்தில் ஓ.பன்னீர்செல்வம் வாக்கு சேகரித்தார்.
அப்போது, அதிமுக அரசின் நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை வைத்து வாக்கு கேட்காமல், தங்களை குறை சொல்லியே ஸ்டாலின் வாக்கு கேட்பதாக குற்றம்சாட்டினார்.

6 லட்சம் கான்கிரீட் வீடுகள்
மேலும், இதுவரை 6 லட்சம் பேருக்கு கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்பட்டுள்ளது என்றும், தமிழகத்தில் குடிசைகளில் வாழும் அனைவருக்கும் 2023க்குள் வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்தார்.

நல்ல தீர்ப்பு
நல்ல திட்டங்களைக் கொண்டுவந்த ஆட்சிக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்ட ஓ.பன்னீர்செல்வம், தேர்தலில் மக்கள் நீதிபதிகளாக இருந்து ஒரு நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும் என்றார்.

கொம்பாதி கொம்பன்
அதே நேரம், எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். முன்னதாக, 1,000 ஸ்டாலின், 1,000 தினகரன் வந்தாலும் அதிமுக அரசை தொட்டு பார்க்க முடியாது என்றும் கூறினார்.

பெருமிதம்
திமுக ஆட்சியில் மின்சார தட்டுப்பாடு இருந்தது. ஆனால், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல், தற்போது வரை, தமிழ்நாடு மின்மிகை மாநிலமாக திகழ்ந்து கொண்டிருப்பதாகவும், அவர் பெருமிதம் தெரிவித்தார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications