Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் வழக்கு.. தர்கா இடத்தில்தான் தீபத்தூண் உள்ளது! வக்பு வாரியம் முக்கிய வாதம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூண் என்று கூறப்படும் தூண் தர்காவுக்கு சொந்தமான இடத்தில் உள்ளதாக வக்ஃபு வாரியம் தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தர்காவுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பான ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவுக்கு எதிராக திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவகர் சார்பாகவும், மாவட்ட ஆட்சியர் சார்பாகவும் தனித்தனியாக மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கேகே ராமகிருஷ்ணன் அமர்வு முன் விசாரணைக்கு நடைபெற்று வருகிறது.

Thiruparankundram Case

ஏற்கனவே கோயில் செயல் அலுவலர் தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், இன்று வக்ஃபு வாரியம் தரப்பின் வாதங்கள் கேட்கப்பட்டு வருகிறது. அப்போது வக்ஃபு வாரியம் தரப்பில் முபின் ஆஜராகினார். இதையடுத்து 1920 ஆம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி மலை மேல் உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தம். நெல்லித்தோப்பு முதல் மலை உச்சி வரை படிக்கட்டு உள்ள பகுதி தர்காவுக்கு சொந்தம் என்று உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து, 1920 உத்தரவுப்படி தர்காவும், அதற்கு அருகில் உள்ள நிலங்களும் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது கோயில் மரபு அல்ல என்பது 1862லேயே உறுதி செய்யப்பட்டுள்ளது. தனி நீதிபதி பழைய தீர்ப்புகளில் உறுதி செய்யப்பட்ட தரவுகளை கருத்தில் கொள்ளவே இல்லை.

அதேபோல் தீபத்தூண் என்று கூறப்படும் பகுதி தர்காவிற்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் என்றும், அங்கு தீபம் ஏற்ற வேண்டும் என்றும் இதற்கு முன் எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. சமீப காலமாகவே தீபத்தூண் என்ற வார்த்தை உபயோகிக்கப்படுகிறது.

அதேபோல் மலை உச்சியில் தர்கா இருப்பதால், பல ஆண்டுகளாக சிக்கந்தர் மலை என்று அழைக்கப்பட்டு வருகிறது. இப்படி அழைக்கப்படுவதை 1920ஆம் ஆண்டு உரிமையியல் நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது என்று வாதிட்டார். தொடர்ந்து நீதிபதிகள், தர்கா முழுவதும் சர்வே செய்யப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, தர்காவுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு இருக்கிறது? இதுகுறித்த ஆவணங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+