திருப்பரங்குன்றம் அருகே பயங்கரம்.. 2 வாலிபர்கள் வெட்டிக்கொலை! உடலை நடு ரோட்டில் வீசிய கொடூரம்
மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் ஒருவரை நடுரோட்டில் வீசி சென்றுள்ள கொடூரம் நடந்துள்ளது. மற்றொருவர் அடையாளம் தெரியாதவாறு பயங்கர ஆயுதங்களால் முகத்தை சிதைத்து கொன்றுள்ளனர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சம்பக்குளம் விலக்கு கப்பலூர் - மதுரை சுற்றுச்சாலை பகுதியில் ஒரு இளைஞர் உடல் சிதைக்கப்பட்ட நிலையில், கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவ்வழியாக சென்றவர்கள், உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார், உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.

முதல் கட்ட விசாரணையில், சாலை விபத்தில் இறந்து இருக்கலாம் என்று கருதப்பட்டது. ஆனால்,அந்த இளைஞரின் உடலில் வெட்டுகாயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து கொலை செய்து உடலை சாலையில் வீசி சென்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நிலையூர் - சம்பக்குளம் அருகே ஒரு பாறையில் அடையாளம் தெரியாதவாறு 30 வயது மதிக்கதக்க ஒரு இளைஞர் முகம் சிதைந்த நிலையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடக்கிறார் என்று ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள் நடைபெற்று இருப்பது திருப்பரங்குன்றத்தில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் ஒரே கும்பல் கொலை செய்ததா? கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்யப்பட்டவர்கள் யார் ? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர்கள் திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்தவர்களா அல்லது வெளியூரில் இருந்து கடத்தி வரப்பட்டு கொலை செய்யப்பட்டார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
திருப்பரங்குன்றம் பகுதியில் இரட்டை கொலை நடந்தது இருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவத்தை அடுத்து, மதுரை மாவட்ட ஏஎஸ்பி நிகழ்விடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications