அதிகாலையில் திடீர் வெளிச்சம்! மதுரையில் வானத்தில் வேகமாக பறந்த மர்ம பொருள்! என்ன தெரியுமா? - வீடியோ
மதுரை: மதுரையில் வானில் நீண்ட நேரமாக வெளிச்சம் எழுப்பியவாறு பறந்த அடையாளம் தெரியாத பொருளால் மக்கள் அச்சம் அடைந்தனர். ஆனால் பின்னர் அது என்ன பொருள் என்று கண்டுபிடிக்கப்பட்டது.
Recommended Video
மதுரை மாவட்டம் அழகர்கோவில் அருகே உள்ள வல்லாளப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை வானில் நீண்ட நேரமாக அடையாளம் தெரியாத பொருள் ஒன்று நீண்ட பறந்துள்ளது. அது பார்பதற்கு வட்ட வடிவமாகவும் நீண்ட நேரமாக அதிக வெளிச்சம் வெளியிட்டவாரும் முன்னோக்கி பறந்து கொண்டே இருந்தது.
அதிகாலையில் கடைகளுக்கு சென்றவர்கள், பால் வாங்க சென்றவர்கள், வேலைக்கு சென்றவர்கள் பலர் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரை
அது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. சிலர் தங்களது மொபைல் போனில் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர், தற்போது அது வைரலாகி வருகின்றது. திடீரென பெரிய வெளிச்சத்தோடு இந்த பொருள் வானில் பறந்து உள்ளது. காலை 6 மணிக்கு பின் இந்த வெளிச்சமான பொருளை பார்த்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வேகமாக பறந்தது
இணையத்தில், வாட்ஸ் ஆப்பில் இந்த வீடியோவை பகிர்ந்த மதுரை மக்கள் பலர் இது என்ன பொருள் என்று சந்தேகம் எழுப்பி உள்ளனர். வெள்ளை மற்றும் சிவப்பு நெருப்பை கக்கிக்கொண்டு அந்த பொருள் வானத்தில் பறந்தது போன்ற காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் இன்று விண்ணில் செயற்கைகோள்களை ஏவ இஸ்ரோ அனுப்பிய பிஎஸ்எல்வி ராக்கெட் வெளிச்சம்தான் இது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செயற்கைகோள்
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து காடுகளின் வளம், தாவரங்கள், மண்ணின் ஈரப்பதம் உள்ளிட்டவற்றை துல்லியமாக கண்டறிவதற்கான இரண்டு செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன. 1,710 கிலோ எடை கொண்ட ரேடார் இமேஜிங் செயற்கைக்கோளான இஓஎஸ்-04 இன்று அனுப்பப்பட்டது. பிஎஸ்எல்வி - சி 52 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு ராக்கெட் இதற்காக விண்ணில் பாய்ந்தது.

மக்கள் குழப்பம்
இந்த செயற்கைகோள் துருவ சுற்றுப்பாதையில் 529 கி.மீ. தொலைவில் சுற்றும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த வருடம் இஸ்ரோ மூலம் அனுப்பப்பட்ட முதல் செயற்கைகோள் ஆகும் இது. வேளாண் துறையில் இது அதிகம் பயன்படுத்தப்படும். அதையே அப்பகுதி மக்கள் பார்த்து அச்சப் பட்டிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்த செயற்கைகோள்கள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications