அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டில் வென்றவர்கள் யார்? எத்தனை மாடு பிடித்தனர்? பரிசு என்ன? முழுவிவரம்
மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நேற்று முடிவடைந்தது. இன்று விறுவிறுப்பாக நடந்து வரும் பாலமேடு ஜல்லிக்கட்டு இனிதே நிறைவு பெற்றது. இதில் வென்றவர்கள், அவர்களுக்கு கிடைத்த பரிசு பற்றிய விபரம் வருமாறு:
பொங்கல் பண்டிகையொட்டி மதுரை உள்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மதுரையில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டி என்பது மிகவும் உலகப்புகழ் பெற்றது.

அதன்படி நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடந்து முடிந்தது. இன்று 2வது நாளாக மதுரை பாலமேடுவில் ஜல்லிக்கட்டு போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நாளை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
இன்று காலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு தொடங்கியது. மாடுகளை வீரர்கள் ஆர்வமாக அடக்கினர். அதேபோல் காளைகளும் ஆக்ரோஷமாக வீரர்களை முட்டி தூக்கி எறிந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் இறுதிச் சுற்று மாலை 4.45 மணிக்கு தொடங்கிய நிலையில் மாலை 5.45 மணிக்கு முடிவடைந்தது.

இறுதி சுற்று முடிவில் 14 காளைகளை அடக்கி நத்தம் பகுதியை சேர்ந்த பார்த்திபன் என்ற வீரர் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டியை சேர்ந்த துளசி என்ற வீரர் 12 காளைகளை அடக்கி 2வது இடம் பிடித்தார். பொதும்புவை சேர்ந்த பிரபா 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்தார்.

இதில் அதிக மாடுகளை பிடித்து வென்ற நத்தம் பார்த்தீபன் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வானார். அவருக்கு துணை முதல்வர் உதயநிதி வழங்கும் கார் பரிசாக கிடைக்கிறது. 2வது இடம் பிடித்த மஞ்சம்பட்டி துளசிராமுக்கு பைக் பரிசாக வழங்கப்பட உள்ளது. அதேபோல் சிறந்த காளையின் உரிமையாளருக்கு தமிழக முதல்வர் வழங்கும் டிராக்டர் மற்றும் 2வது பரிசாக சிறந்த காளையின் உரிமையாளருக்கு நாட்டின பசு மற்றும் கன்று வழங்கப்பட உள்ளது.
முன்னதாக நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகளை, வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். 11 சுற்றுகளாக 836 காளைகள் சீறிப்பாய்ந்தன. வீரர்கள் காளைகளை திறமையாக அடக்கினர். அதேபோல் காளைகளும் வீரர்களை பந்தாடியது. போட்டியின் இறுதியில்
19 காளைகளைப் பிடித்து திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த கார்த்தி முதலிடம் பிடித்தார். 15 காளைகளைப் பிடித்து குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த அரவிந்த் திவாகர் 2வது இடத்தையும், 14 காளைகளைப் பிடித்து திருப்புவனம் முரளிதரன் 3வது இடத்தையும் பிடித்தனர். அதிக காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர் கார்த்திக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் ரூ.8.50 லட்சம் மதிப்புள்ள நிசான் கார் பரிசாக வழங்கப்பட்டது.
2ம்இடம் பிடித்த அரவிந்த் திவாகருக்கு இருசக்கர வாகனம் பரிசாக வழங்கப்பட்டது. மலையாண்டி என்பவரின் காளை, சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசாக மலையாண்டிக்கு முதலமைச்சர் சார்பில் டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. ஜி.ஆர்.கார்த்தி என்பவரின் காளைக்கு இரண்டாம் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நாளை மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது.
-
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
திமுகவுக்கு திரும்பிய தென்னாற்காடு ‘தலை’.. 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வந்த செஞ்சி ராமச்சந்திரன்! -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு












Click it and Unblock the Notifications