சென்னையை காட்டிலும் இரட்டிப்பு மரணங்கள்.. கொரோனாவுக்கு மதுரை மீது மட்டும் ஏன் அத்தனை கோபம்?.. எம்பி
மதுரை: சென்னையை காட்டிலும் மதுரையில் கொரோனாவால் இரட்டிப்பு மரணம் ஏற்படுவது ஏன் என மதுரை எம்பி சு வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறுகையில், கொரோனா பாதிப்புக்கு எதிராக மதுரை மற்றும் பிற தென் மாவட்டங்களில் அரசு எடுக்கும் செயல்பாடுகள் கவலையை ஏற்படுத்துகிறது. பல முறைக்கு பிறகும் அரசு தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ளாதது வருத்தமளிக்கிறது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3000 பேராக இருந்த போது சென்னையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக இருந்தது. மதுரையில் 51 ஆக இருந்தது.

மதுரை
கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5000 இருந்த போது சென்னையில் பலி எண்ணிக்கை 42 ஆக இருந்தது. அது போல் மதுரையில் பலி எண்ணிக்கை 86 ஆக இருந்தது. ஒரே நோய்தான் ஆனால் சென்னையை காட்டிலும் மதுரையில் பலி எண்ணிக்கை இரட்டிப்பாவது ஏன்? மதுரை மீது கொரோனாவுக்கு அப்படி என்ன கோபம்?

ஆம்புலன்ஸ்
நிர்வாகம் கவனக்குறைவாக இருப்பதால்தான் இந்த மரணங்கள் ஏற்படுகின்றன. சென்னையில் கொரோனா பாதிப்பின் வேகம் அதிகரித்தவுடன் மற்ற மாவட்டங்களில் இருந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சென்னைக்கு வரவழைக்கப்பட்டன. சென்னையை சுற்றியுள்ள 5 மாவட்டங்களிலிருந்து 40 ஆம்புலன்ஸ்களும் 200 ஊழியர்களும் சென்னை வந்தனர்.

சென்னை
அவசர தேவை அதில் ஒன்றும் தவறில்லை. ஆனால் கடந்த இரு வாரங்களால் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அது போல் தென் மாவட்டங்களிலும் அது அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஒரு மாதமாகியும் ஆம்புலன்ஸ்களும் ஊழியர்களும் சென்னையிலிருந்து திரும்பி வரவே இல்லை. இதனால் மதுரையில் மக்கள் அவதிப்படுகிறார்கள்.

கையாளவில்லை
ஒரு ஆம்புலன்ஸ் கிடைக்க 4 முதல் 5 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் நிலவுகிறது. நடுராத்திரியில் ஆம்புலன்ஸை அழைத்தால் காலையில் வருகிறார்கள். ஆம்புலன்ஸ் சேவை தேவையை விட குறைவாகவே இருக்கிறது. ஆம்புலன்ஸ் பிரச்சினை மிகவும் அடிப்படையான ஒன்று. ஆனால் மாநில அரசு அதை முறையாக கையாளவில்லை.

3000 பேருக்கு சோதனை
நாங்கள் குரல் கொடுத்தபிறகு தினமும் மதுரையில் 2100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தினமும் 3000 பேருக்கு சோதனை செய்தால் மட்டுமே நோயின் வேகம் கட்டுப்படுத்தப்படும். சென்னையை விட மதுரையில் மரணங்கள் நிகழ்வதற்கு காரணம் என்ன? நோயாளிகளை கண்டறிந்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிப்பதில் என்ன பிரச்சினை. இதற்கு தீர்வு காண மாநில அரசு எடுத்த முயற்சிகள் குறித்து முதல்வர் பதிலளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார் சு வெங்கடேசன்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications