மத்திய அமைச்சராக சான்ஸ் இருக்கா? டக்கென ஓபிஎஸ் கொடுத்த ரியாக்சன்! அதிமுக பற்றி என்ன சொன்னார் பாருங்க
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஓ பன்னீர் செல்வம் எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கூறினார். அப்போது உங்களை மத்திய அமைச்சராக பார்க்கலாமா என்ற செய்தியாளர்கள் கேள்விக்கும் ஓபிஎஸ் பதில் அளித்தார்.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கிய லோக்சபா தேர்தல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து வாக்கு எண்ணிக்கை நாளை மறுநாள் நடக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை அதிமுக தலைமையில் ஒரு கூட்டணியாகவும், திமுக தலைமையில் ஒரு கூட்டணியாகவும், பாஜக தலைமையில் ஒரு கூட்டணியும் நாம் தமிழர் கட்சி தனித்தும் தேர்தலை சந்திக்கின்றன. இதில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி கிடையாது என்று திட்டவட்டமாக கூறியதால் பாஜக, அன்புமணி ராமதாசின் பாமக, டிடிவி தினகரனின் அமமுக, ஓ பன்னீர்செல்வத்தின் அதிமுக உரிமை மீட்புவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது.
இதில் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். இந்த நிலையில், இன்று மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஓ பன்னீர் செல்வம் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தல் இந்த நாட்டை யார் ஆள வேண்டும் என்பதை தேர்வு செய்வதற்காக நடந்துள்ளது. இதில் பாஜக கூட்டணி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வருவதற்கு நல்ல ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. என்னை பொருத்தவரை நான் பலன்களை எதிர்பார்த்து கட்சி வேலை செய்பவன் கிடையாது. கட்சிக்கு விசுவாசமாக உழைப்பவன். இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது ராமநாதபுரம் தொகுதியில் உங்களுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், "என்னுடைய வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளது" என்றார். அப்போது இனி உங்களை மத்திய அமைச்சராக பார்க்கலாமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த ஓ பன்னீர் செல்வம், மேலே பார்த்து எல்லாம் இறைவன் கையில் இருக்கிறது என்று சிரித்தப்படி பதில் அளித்தார். தொடர்ந்து அதிமுக குறித்து பேசிய ஓபிஎஸ், "இன்றைக்கு இருக்கக்கூடிய அரசியல் சூழலில் நாட்டு நடப்பினை, அரசு செய்கின்ற தவறுகளை சுட்டிக் காட்டுகின்ற ஒரே இயக்கமாக அதிமுக உரிமை மீட்பு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
அரசியல் நடப்புகளை மிகத் துல்லியமாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். யாரால் அதிமுக இப்படி சின்னாபின்னமாக்கப்பட்டது என்பது எல்லாருக்கும் தெரியும். அது நடந்து முடிந்துள்ள லோக்சபா தேர்தல் முடிவு வந்த பிறகு மக்களுக்கு தெரியும்" என்றார்.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில் நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகின. இதில் தமிழகத்தின் ராமநாதபுரம் தொகுதியில் ஓ பன்னீர்செல்வத்திற்கு வெற்றி வாய்ப்பு குறைவு என்றே கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளன.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications