Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛சீதையை அவமதித்த மாணவர்’.. ராமாயண நாடக காட்சியால் களேபரமான புனே பல்கலை.. பரபரப்பு - அதிரடி ஆக்சன்

Subscribe to Oneindia Tamil

மும்பை: புனே பல்கலைக்கழகத்தில் நடந்த ராமாயண நாடகத்தில் சீதை சிகரெட் புகைக்கும் காட்சி இடம்பெற்றது சர்ச்சையானது. இதையடுத்து அங்கு மோதல் ஏற்பட்ட நிலையில் பல்கலைக்கழகம் களேபரமானது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. கடந்த மாதம் 22ம் தேதி கோவில் கும்பாபிேஷகம் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கோவில் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். இதையடுத்து பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர்.

4 students and one professor arrested for insulting Sita in a program at Pune University

கோவில் திறந்த 11 நாளில் 25 லட்சம் பக்தர்கள் அயோத்தியில் ராமர் சிலையை தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து மக்கள் கூட்டம் ராமர் கோவிலில் அலைமோதுகிறது.

இந்நிலையில் தான் மகாராஷ்டிரா மாநிலம் புனே பல்கலைக்கழகத்தில் ராமாயணம் கதையின் அடிப்படையில் மாணவ-மாணவிகள் நாடகம் அரங்கேற்றம் செய்தனர். புனே பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான புனே லலிதத் கால கேந்திராவில் நிகழ்ச்சி நடந்தது. இந்த நாடகத்தில் இந்து மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையிலான வசனங்கள் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி சீதை போன்று வேடம் போட்டு இருந்தவர் புகைப்பிடிக்கும் வகையிலான காட்சி இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து அங்கிருந்த இந்த நாடகத்துக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பாக செயல்படும் ஏபிவிபி எனும் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோஷமிட்டு நாடகத்தை நிறுத்தும்படி கூறினர். இதனால் ஆத்திரமடைந்தவர்கள் கோஷமிட்டவர்களை தாக்கி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இந்த சம்பவத்துக்கு ஏபிவிபி மற்றும் பாஜகவினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக ஏபிவிபி அமைப்பை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் ஹர்புட் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியது உள்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். லலித் கலா கேந்திரா துறையின் தலைவரான பேராசிரியர் பிரவீன் போலே, மாணவர்களான பாவேஷ் பட்டீல், ஜெய் பேட்னீகர், பிரதமேஷ் சாவந்த், ரிஷிகேஷ் தால்வி, யஷ் சிக்லி ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே தான் ராமாயணம் நாடகத்தில் சீதை சிகரெட் புகைக்கும் காட்சி தொடர்பான போட்டோ மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+